வாயிலேயே வெட்டு
குறுங்கதை
டேய் பொண்ணு போட்டோ வாட்ஸாப் பண்ணிருந்தேனே பாத்தியா?
பாத்தேன், நீ போட்டோவை மாத்தி அனுப்பிட்டமா 'சரவணன் மீனாட்சி'
கதையில வாரமாதிரி ஒரு பொண்ணுட போட்டோதான் வந்துருந்துச்சி
சிகப்பு சாரி கட்டுன போட்டோ தானே?
ஆமா, பாதி செல்ஃபீ.
அதுதாண்டா பொண்ணு....
யம்மா... சரியாதான் சொல்லுறியா?
அது என்னமோ சேலிப்ரட்டி மாதிரிலே இருக்கு. என்னதான் மொபைல எடிட் பண்ணிருத்தாகூட ரொம்ப அழகா இருக்காளே!
சந்தேகமேபடாதடா அதுதான் பொண்ணு.
அப்போ வேணாம். எனக்கு பிடிக்கலனு சொல்லிடு.
கிறுக்கு பயலே! என்னடா சொல்லுற?
அந்த பொண்ணுக்கு என்ன குறை,
தங்க சிலையாட்டம் இருக்காளே!?
அதுதான் பிரச்சனையே, சுமாரான பிகரே வேணான்னுட்டு போய்டுறாளுங்க, இந்த பொண்ணு வேற ரொம்ப அழகா இருக்கா நிச்சயமா சொதப்பிடும்
ஏன்டா இப்படி அபசகுனமா யோசிக்கிற?
இரு முதல்ல ஜோசியர் கிட்ட குடுத்து பொருத்தம் பார்ப்போம்.
எனக்கு அவனை நினச்சாதான் பயமே, நிச்சயமா ஏதாச்சும் சொல்லி கொழப்பிடுவான்.
பெரியவங்கள அப்பிடி சொல்ல கூடாதுடா, சரி நா எல்லாம் பேசிட்டு உனக்கு கோல் பண்ணுறேன்.
**
சில வாரங்களுக்கு பிறகு
டேய் தப்பி உனக்கு விஷயம் தெரியுமா,
நம்ம ஜோசியரை யாரோ வாயிலேயே
வெட்டி இருக்காண்டா ! படுபாவி அந்த அப்பாவி மனுஷனை போய்ட்டு இப்படி பண்ணிட்டானே..., நாசமா தா போவான்!
சாப்பிட்டு கொண்டிருந்த எனக்கு
புரையேறி இருமல் வந்தது...,
தண்ணீரை குடித்து ஆசுவாசபடுத்தி கொண்டேன்.
எந்த ஜோசியரை சொல்லுறமா?
அதுதாண்டா கடைசியா உனக்கு வந்த பொண்ணு ஜாதகத்தை பார்த்துட்டு.
தோஷம் இருக்கு, மீறி பண்ணுன்னா
வீட்டுல உள்ள பெரியவங்க யாராச்சும் செத்துருவாங்க, வேணவே வேணாமுன்னு சொன்னாரே, அவர்தான்.
ம்ம்ம்..., பாவதா விடுமா, அந்த மனுஷனுக்கு ஆயுள் அவ்வளவுதா.
சரிடா உன்னோட அழுக்கு உடுப்பெல்லாம் துவைச்சு போட்டுட்டேன். மறக்காம எடுத்து வச்சிக்கோ. அந்த வெள்ளை ஷேர்ட்ல இருக்கு தக்காளி சட்னி கறை மட்டும் எவ்வளவு தேச்சும் போகுதுதே இல்ல
டீ குடிச்சிகிட்டு லேப்டாப்ல Memories of Murder படம் பாத்துட்டு இருந்த எனக்கு மறுபடியும் புரையேறியது.
நரேஷ்
04-09-2020
Comments
Post a Comment