ஓருடல்
நேற்று இருவரும் வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக்கொண்டோம். சோர்ந்து, காயத்துடன் வெறுத்து ஒதுங்கிச் சென்றோம். அவ்வளவு தான், முடித்துக்கொள்ளலாம் என்று தீர்மானித்துக் கொண்டேன். பிறகு மறந்து விட்டோம். நான் உன்னை இப்பொழுது முத்தமிட்டுக் கொண்டிருக்கிறேன். 07-24-2021