Posts

Showing posts from April 3, 2021

"மஜ்னூன் குறுங்கதைகள்" தீவிர இலக்கிய வாசகர் தஷ்ணாவின் வாசிப்பனுவம்

Image
"மஜ்னூன் குறுங்கதைகள்" புத்தகத்தை பற்றிய நண்பர் மற்றும் தீவிர இலக்கிய வாசகர் தஷ்ணாவின் வாசிப்பனுவம்  Dhashna Moorthy   *** எழுத்தாளர் நரேஷ் அவர்களின் முதல் புத்தகம் "தவிப்பு" எனும் கதையைப் படித்தேன். எழுத்தாளனுக்கும் அவன் பிரதிக்குமான உறையாடல் தான் கதை (அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகளில் சாந்தியும் எழுத்தாளனும் பேசுவார்களே ஞாபகம் உள்ளதா) கதையென்று சொல்லலாகாது, கதைகளையே கேட்டுக் கேட்டு போரடித்துப் போய் கடுப்பில் இருப்பவர்களுக்கான ஓர் குறுங்கதைகள் தொகுப்பு. Kindle Unlimited இல் வாசிக்கவும் கிடைக்கிறது. காசு கொடுத்து வாங்கும் புண்ணிவான்களுக்காக வெறும் 49 ரூபாவுக்கும் கிடைக்கிறது. படித்து விட்டு ரிவ்யூ எழுதுங்கள், பாராட்டுங்கள், திட்டுங்கள். இனி கதைகளை பற்றிய என் பார்வை. 4. கயா புவி மீது நாம் கொள்ளும் அக்கறையை புவியே கேலி செய்யும்படியான கதை. கயா கிரேக்க புவிக்கடவுளின் பெயரென்பது உப தகவல். 5. நரகத்தில் ஒரு நாள் பேஸ்புக் வாட்சப் ஷேரிங் குரூப்புகளை கலாய்த்து ஒரு கதை. 6. பழைய எழுத்தாளரும்  புதிய எழுத்தாளரும். செம பகடியானதொரு கதை சிரித்துக் கொண்டே படித்தேன். பு

"மஜ்னூன் குறுங்கதைகள்" மற்றும் ஒரு பார்வை

Image
நரேஷின் "மஜ்னூன்" குறுங்கதை தொகுப்பை கிண்டிலில் வாசித்தேன். ஓரிரண்டு சிறுகதைகளும், மசாலாப்பொடி தூவினது போல கொஞ்சுண்டு மைக்ரோ கதைகளும் இருக்கின்றன. குறுங்கதைகளுக்கு குமுதத்தில் வரும் ஒரு பக்க கதைகள் பிரபல்யம். வாத்தியார் சுஜாதா ஆரம்பித்து வைத்தது அந்த ஒரு பக்க கதைகளை என்று நினைக்கிறேன்.  என்னை பொறுத்தவரை குறுங்கதைகள் எழுத சிறந்த மொழி வளமும் புத்திசாலித்தனமும் தேவை (வாசகர்களை அலறி அடித்து ஓட வைக்காமல் எழுத மாத்திரமே இவை தேவை) நரேஷிற்கு இரண்டும் நன்கு கைவரப்பெற்றுள்ளது. எனக்கு இருந்த ஒரே ஒரு சிக்கல் இந்த kindle தான். எனக்கு ஏனோ இந்த kindle அவ்வளவாக உவப்பதில்லை. இந்த மாதிரி வேறு வழியே இல்லாத புத்தகங்களுக்கு kindle ஐ நாட வேண்டி இருக்கிறது.  வெறுமனே ஒரு சுழிக்குள் சுற்றி சுற்றி கதைகள் எழுதாமல் காதல் காமம் என்று தொடக்கி கேயாஸ் தியரி வரை எல்லைகளை விரித்து எழுதி இருக்கிறார். நிறைய புதிய முயற்சிகளை பரீட்சித்துப் பார்த்தது போல தெரிகிறது. அவைகள் வெற்றி பெறும் என்றே நம்புகிறேன். "அங்கு யாரும் புலப்படவில்லை" ட்விஸ்ட்க்கு மேல ட்விஸ்ட். ஒரு ஹாரர் திரில்லர் சோர்ட் பிலிம

எழுத்தாளர் நர்மியின் "மஜ்னூன் குறுங்கதைகள்" நூல் விமர்சனம்

Image
ஒரு படைப்பு என்னச்செய்ய வேண்டும் என்று என்னை கேட்டால், அது ஏதோ ஒரு உந்துதலை வாசகனுக்குள் ஏற்படுத்த வேண்டும். நரேஷின் மஜ்னூன் குறுங்கதையை படித்த பின்னர் குறுங்கதை தொகுப்புகளை தேடித்தேடி வாசிக்க தொடங்கியிருக்கிறேன். புனைவை கையில் எடுப்பதற்கு  தைரியம் வேண்டும்.  குறுங்கதைகளை கையாள இன்னும் அதிகமாகவே தேவையென கருதுகிறேன். அது ஆசிரியருக்கு நிறையவே இருக்கிறது. இந்த குறுங்கதை தொகுப்பை வாசித்து முடித்தபோது தெரிந்ததெல்லாம் இதை எழுதியவர் ஒரு தேர்ந்த வாசகன் என்பது மட்டுமே. எடுத்துக் கொண்ட ஒவ்வொரு தலைப்பும் பரந்துபட்டதாக இருந்தது. எனக்கு பிடித்த குறுங்கதைகள் பற்றி கூறுவதற்கு முன்னர் எழுத்தாளரின் காதல் வகையறா கதைகள் சுத்தமாக பிடிக்கவில்லை. 😜 "அங்கு யாரும் புலப்படவில்லை" என்ற குறுங்கதையில் கடைசிவரை ஒரு சுவாரஸ்யமான திகில் ஒன்று இருந்துக்கொண்டே இருந்தது. இதில் உண்மையில் பேய் யாரென்ற வினா தொடர்ந்துக்கொண்டே இருந்தது. "கயா" என்ற கதையில் புவியை உருவாக்கிய கிரேக்க தெய்வம் பற்றிய அறிமுகம்,  "பழைய எழுத்தாளரும், புதிய எழுத்தாளரும்" என்ற கதையில் வெளிப்படுகிற நகைச்சுவைய

‘மஜ்னூன்’ குறுங்கதைத் தொகுப்பு குறித்த பார்வை

Image
விமர்சனம் தளத்தில் வெளியாகி உள்ள, நரேஷின் முதல் நூல்மஜ்னூன்மஜ்னூன் ‘மஜ்னூன்’ குறுங்கதைத் தொகுப்பு குறித்த பார்வையைக் கீழுள்ள இணைப்பில் வாசிக்கலாம்.  ——————- ‘தமிழ்க்கிழவியின் கிறுக்கல்கள்’ தொகுப்பு வெளிவந்த போது, வாழ்த்திய ஒவ்வொருவரையும் நூல் குறித்த கருத்தைப் பகிரும்படி கேட்டிருந்தேன். ‘அருமை’ சொல்லிக் கடந்து போகாமல், வாசகர் கருத்துகளைப் பகிர்ந்தவர்களுள் சகோதரர் நரேஷும் ஒருவர்.  தங்கள் எழுத்துப் பயணம் நெடிது நீளவும், சிகரங்கள் தொடவும் வாழ்த்துகிறேன் சகோதரா! ————— நன்றி : சந்தோஷ் குமார் அவர்கள்                www.vimarsanam.in விமர்சனத்தை படிக்க