Posts

Showing posts from April 9, 2021

மஜ்னூன் குறுங்கதைகள் விமர்சனம்

Image
நண்பர் நரேஷ் அவர்கள் எழுதி kindle தளத்தில் வந்துள்ள மஜ்னூன் நூல் பற்றிய ஒரு குறிப்பு: நரேஷ் அவரின் சில கதைகளை ஏற்கனவே அவரின் ப்ளாக்கில் படித்துள்ளேன், எனவே அவரின் மொழி ஆளுமை மற்றும் சிந்தனை திறன் பற்றியெல்லாம் ஏற்கனவே ஒரு மதிப்பீடு உண்டு. இந்த நூல் மஜ்னூன் பல குறுங்கதைகள் அடங்கிய ஒரு தொகுப்பு. இது அவரின் முதற்புத்தகம் தான் என்றாலும் சீரான எழுத்தினால் பல வருட அனுபவம் உள்ள எழுத்தாளரை போல்  நேர்த்தியாக எழுதியுள்ளார். இதில் தவிப்பு, மஜ்னூன் போன்ற கதைகள் ஏற்கனவே கனலி போன்ற இலக்கிய பத்திரிக்கையில் வந்திருப்பதே அவரின் திறமைக்கு ஒரு சான்று. எனக்கு இதில் பல கதைகள் பிடித்திருந்தாலும் பிணந்தன்னிகள் கொடுத்த அதிர்வு அதிகம். மூன்று பைத்தியங்கள் கதையும் கொஞ்சம் என்னை பார்ப்பது போலிருந்தது. காதல் கதைகளை தனக்குள்ள அனுபவத்தால் பல விதங்களிலும் எழுதியுள்ளார், அதில் காமெடியும் இருக்கு. குறிப்பாக முன்னாள் காதலியை பார்க்கசெல்லும் இடத்தில் ஒலிக்கும் பாடல் சம்பந்தப்பட்ட கதை 😁. அறிவியல் கதையும் உண்டு அதிலும் காதல் ஒளிந்திருக்கிறது. சில திகில் கதைகளும் இருக்கிறது.  மொத்தத்தில் கலவையான கதைகள் அடங்கி

திசைகாட்டி

Image
மனிதன் திசைகாட்டியை கண்டு பிடிக்கும் வரைக்கும் நெடும் பயணங்கள் சென்று அதே இடத்துக்கு மீண்டும் திரும்பி வருவது சாத்தியமில்லாமல் இருந்தது. இருந்தாலும் மனிதன் புதிய உலகை தேடி பயணம் செய்து கொண்டே இருந்தான். அக்காலகட்டத்தில் நட்சத்திரங்களை அடையாளமாக வைத்து குறிப்பிட்ட திசையை நோக்கி பயணம் செய்தார்கள், ஆனால் வருடம் முழுவதும் அவை ஒரே இடத்தில் இருப்பதில்லை. புவி சுழற்சிக்கு ஏற்ப அவைகளின் நிலையும் மாறுபடும். மாற்று வழி தேவைப்பட்டது. பறவைகளை திசையை அறிந்து கொள்ளுவதற்கு பயன்படுத்த தொடங்கினார்கள். கடல் பயணம் செய்பவர்கள் தங்களுடன் காகங்களை கூண்டில் அடைத்து கொண்டுச் செல்வார்கள். நடு கடலில் தொலைந்து விட்டால், அவற்றை திறந்து பறக்க விட்டு அது சென்ற திசையை பின் தொடர்ந்து செல்வார்கள். அதன் மூலம் நிலத்தை கண்டடைய முடிந்தது. பறவைகளில் காகத்தை தேர்ந்தெடுக்க காரணம், அவற்றின் உயிர்காத்து வாழும் திறன் தான். எந்த உணவை கொடுத்தாலும்  உண்ணும், குளிர் சூடு என எவ்வித தட்பவெப்ப சூழலிலும் வாழும், இலகுவாக பிடிக்கவும் முடியும், மற்றும் மனிதனைக் கண்டு மிரண்டும் போகாது. தீவுகளில் வாழ்ந்த மக்கள் காகத்தை கண்டால்,

கிண்டில் (Kindle) என்றால் என்ன?

Image
"மஜ்னூன் குறுங்கதைகள்" புத்தகத்தை எப்படி வாசிப்பது என்று சில நண்பர்கள் கேட்டார்கள். அவர்களுக்கு தான் இந்த பதிவு. இலங்கையில் கிண்டில் (Kindle) என்ற வார்த்தையே பெரும்பாலானவர்களுக்கு புதிதாக இருக்கும். அதைப் பற்றிய சுருக்கமான விளக்கம் Kindle என்பது ஒரு App. இதனை உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் Google Store இல் இலவசமாக தரவிரக்கம் செய்து கொள்ளலாம். Kindle App மூலம் புத்தகங்களை அதற்குறிய விலையை கொடுத்து தரவிரக்கம் செய்து மின் புத்தகமாக வாசிக்க முடியும். அல்லது குறிப்பிட்ட தொகையை சில மாதங்களுக்கு செலுத்தி வேண்டிய புத்தகத்தை விலை கொடுத்து வாங்காமலே படிக்க முடியும். இம் முறையை Kindle unlimited என்பார்கள். (கவனிக்க; இச் சலுகை சில புத்தகங்களுக்கு மட்டுமே கிடைக்கும்) குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அந்த புத்தகம் உங்கள் லைப்ரியில் இருந்து மறைந்து விடும். இது இல்லாமல் எழுத்தாளர் விரும்பினால் புத்தகத்தை இலவசமாக ஒரு சில நாட்களுக்கு வழங்குவார், அப்பொழுது தரவிரக்கம் செய்து கொள்ளலாம். நான் எனது புத்தகத்துக்கு ஆகக்குறைந்த விலையாக இந்திய ரூபாய் 49.00 நிர்ணயம் செய்துள்ளேன். Kindle unlim