Posts

Showing posts from September 28, 2019

சகினா கிழவி

Image
நான் O/L படிக்கும் போது தமிழ் பாடத்தில் சகினானு ஓரு கிழவியை பற்றி சிறுகதையொன்று இருந்தது. இப்போ அநேகமாக அதை பாடதிட்டத்திலிருந்து தூக்கிருபாங்கனு நினைக்கிறேன். கிழவியின் பெயர் சில வேலை கொஞ்சம் வித்தியாசப்படலாம். 2005 படிச்சது பல வருடங்களாகிருச்சி ஆனால் கதையின் நாதத்தை இன்னும் மறக்கல.., வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அற்புதமான கதை! ஒருவேளை இதை சினிமாவாக எடுத்தால் கேன்ஸ் திரைப்படவிழாவுக்கே அனுப்பலாம். மனதில் தாக்கத்தை உண்டாக்கிடுச்சி கிழவியின் வாழ்கை. எனக்கு ரொம்ப பிடித்த ஓரு கதாபாத்திரம் சகினா. வகுப்பில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசித்து கொண்டிருப்பேன். வாழ்நாள் முழுவதும் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்திறாது முதுமை எய்தி மடிந்து போகும் ஓரு அபலையின் கதை. கதைப்படி அவள் சார்ந்த சமூகத்தின் நம்பிக்கைகளின் பிரகாரம் பெண்கள் முகத்தை கண்ணாடியில் பார்ப்பது பாவமான செயல். அதனாலேயே தன் முகம் எப்படி இருக்கும் என்பது அவளுக்கு கடைசி மட்டும் தெரியாமலே போனது. ஓரு நாள் கிழவியின் மகன் அவளுடன் வாய்த்தர்க்கம் புரியும் போது "முதலில் உன் முகத்தை நீ பார்த்துறிக்கியானு" கடுந்தொனியில் கேட்பான்.

என்னவள் இனியில்லை

Image
நேற்று காதலியின் திருமணத்திற்கு அலையா விருந்தாளியாக போயிருந்தேன், முட்டாள்த்தனமான யோசனைதான். அங்கு செல்வதற்கு முன் எனக்கு நானே சில கட்டுப்பாடுகளை விதித்து கொண்டேன். அதற்கு கட்டுப்பட்டால் தாராளமாக போகலாம் என்பதுதான் நிபந்தனை. ஒன்று கண் கலங்க கூடாது, இரண்டாவது மனம் உடைத்து போக கூடாது, கடைசியாக சோகம் வெளியே தெரியாதபடி முகத்தை வைத்து கொள்ளவேண்டும். முகத்தில்  மெல்லிய புன்னகை தவழ்ந்தால் கூடுதல் தகைமை. முதலில் போவதே கிறுக்குத்தனமான யோசனை, விதிக்கபட்ட நிபந்தனைகள் கர்ணக்கொடூரம்! ம்ம்ம் சரி போவது என்று கடைசியில் முடிவாயிற்று. திருமணநாள், மணமேடையினை பார்த்த வண்ணம் முன் வரிசையில் அமர்ந்து கொண்டேன். என்னை அவள் எதிர்பார்த்திருக்கமாட்டாள். வருகையை தெரியப்படுத்தவும் நான் விரும்பவில்லை. ஓரு வேலை அதுவாக நிகழ்ந்தால் நிகழட்டும். அவளருகில் என்னுடைய இடத்தில் வேறு ஒருவன் அமர்ந்திருத்தான். பாவம் அவன் மனதில் உள்ளவள் வேறு எங்கு அமர்த்திருந்தாலோ இல்லை இருப்பாளோ!? உலகம் இப்படிதான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதில் எனக்கு அசாதாரணமான நம்பிக்கை.நாம் எல்லோரும் மற்றவர்களின் அன்புக்குரியவர்களை தான் நமக்கு சொந்தம

காதலடி நீ எனக்கு

Image
இப்பொழுதெல்லாம் நாம் சென்ற பேருந்து பயணம் நினைவுகளில் அடிக்கடி வருகிறது. ஜன்னல் ஓரமாக இருவரும் அமர்ந்திருந்தோம். இளம்காலை பொழுது இதமான காலநிலை, சில்லேன காற்று முகம் தீண்டி சென்று கொண்டிருந்தது. என் தோளில் சாய்ந்தப்படி கண்ணயர்ந்து விட்டிருந்தாய். காற்றில் கலைந்த உன் நெற்றிமுடி என்முகத்தை வருடி கொண்டிருந்த சமயத்தில் ஒருபுறம் மனதில் ஆயிரம் குழப்பங்களும் கேள்விகளும் அலைபாய்ந்து கொண்டிருந்தன நம் இருவருக்குமான உறவு என்ன? நான் எதை நோக்கி உன்னை இழுத்து செல்கிறேன்? என குற்றஉணர்ச்சியில் தடுமாறி கொண்டிருந்தேன். இதற்கு நடுவில் உன் கலைந்த கூந்தலும் நானும் பேசிக்கொண்டிருந்தொம். அது காற்றின் மேல் பழியை போட்டு மென்வருடல்களால் என்னை சீண்டி கொண்டிருந்து. அதனை சரி செய்யும் போது எங்கள் சண்டையை நீ கவனித்து விட்டாய். அத்தருணத்தில் என்னை நீ பார்த்த பார்வை நினைவு இருக்கின்றதா? ம்ம்ம்ம்ம்...., அந்நொடிதான் நான் விழுந்தேன்! ஆடைக்கலைந்த தருணத்தைவிட அக்கணம் தந்த இன்பவலி இப்பொழுது வலியாய் மட்டும் எஞ்சி நிற்கிறது.  நம்பிய இடத்தில் தொலைந்து போனோம் இருவரும். சில நேரம் ஓரு அழைப்பு, ஓரு குறும்செய்தி, ஓரு ச