Posts

Showing posts from December 22, 2019

காடு

Image
நாவல் / ஜெயமோகன்  இந்த வருடத்தில் வாசித்த மிக அற்புதமான நாவல். நல்லப்படியாகதான் இவ்வருடத்தை கடந்து போகிறேன். காரணம் உன்னதமான படைப்பாளியை அடையாளம் கண்டுக்கொண்ட மனநிறைவு. இது வரை ஜெமோவை படித்து இல்லையென்றால் இந்த புத்தகத்தை கட்டாயம் படித்து விடுங்கள். பிறகு மனிதரை விடமாட்டீர்கள்! எனக்கு பித்து பிடிக்க செய்து விட்டார். நீலியின் நினைவில் கனத்தமனதுடன் நாவலை வாசித்து முடித்தேன். கிரிக்கும் நீலிக்கும் இடையிலான உறவு என்னுள் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.  புதிதாக வாசிக்க தொடங்குபவர்களுக்கு காடு ஒரு நல்ல ஆரம்பமில்லை. பொறுமையும் உன்னிப்பான அவதானமும் தேவை. எனக்கும் முதல் நூறு பக்கங்களில் சில தடுமாற்றம் இருக்கதான் செய்தது. கடினமான மொழிநடை ஊன்றி வாசித்தால் மட்டும் தான் உள்வாங்க முடியும். ஒருவேளை ஜெமோவின் எழுத்துக்கு நான் புதிது என்பதால்கூட இருக்கலாம். தொடக்கத்தில் இன்னும் சில பக்கங்களை தாண்டும் போது சரியாகிவிடும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.  இன்னொரு முக்கிய சிக்கல் மலையாளம். கதைக்களமும், கதாபாத்திரங்களும் மலையாள பின்னணி கொண்டதால். ஆரம்பத்தில் பாதி புரியவேயில்லை. எ...