Posts

Showing posts from May 25, 2020

புதுவகை எழுத்தின் முன் உள்ள சவால்கள்

சிங்கப்பூரை சேர்ந்த  "மாயா இலக்கிய வட்டம்" இம்மாத ஆரம்பத்தில் ஏற்பாடு செய்திருந்த  "புதுவகை எழுத்தின் முன் உள்ள சவால்கள்" என்ற தலைப்பில்  கீழான சாருநிவேதிதாவின் கலந்துரையாடல் Zoom செயலியின் ஊடாக நடைபெற்றது.  முதல் ஒரு மணிநேரம் சாரு பேசினார். பிறகு ஒரு மணிநேரம் கேள்வி பதில். குறிப்பிட்ட  தினத்தில் விடுமுறை என்பதால் நானும் கலந்து கொண்டேன். சாருவின் "நே நோ" சிறுகதை தொகுப்பிலிருந்து  சில கதைகளையும்,  The Beach என்ற  Alain Robbe-Grillet இன் பிரெஞ்சு சிறுகதையும் படித்துவிட்டு, Bela Tarr இன் The Turin Horse என்ற ஹாங்கரிய படத்தையும், முடிந்தால் பார்த்துவிட்டும் வரும்படி கூறினார்.  காரணம் புதுவகையான எழுத்துக்கு மேற்குறிப்பிட்ட படைப்புகள் சிறந்த உதாரணங்கள். நான் சாருவின் சிறுகதைகள் ஆன  " நே நோ "  " The Joker was here "  "நட்சத்திரங்களிடமிருந்து செய்தி  கொண்டு வந்தவர்களும், பிணந்தின்னிகளும்"   ஆகிய கதைகளை மீள்வாசிப்பு செய்துவிட்டும், The Beach என்ற  சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை ஒன்றுக்கு இரண்டு தடவை படித்து புரிந்து கொண்டும், The Tur

கார்த்தி டயல் செய்த எண்

கார்த்தி டயல் செய்த எண்    குறும்படத்தில் கார்த்தி ஜெஸியிடம்  "ஒரு ஆணா கேட்குறேன்   நீ எனக்கு வேணும் " என்ற வசனம் இங்கு பல கோவலன்களிடம் பெரும் எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. உங்களிடம் ஒன்று கூறவேண்டும். இந்த உலகம் கார்த்தி மற்றும் ஜெஸிகளால் நிரம்பியது.  நம் தாத்தா, பாட்டி கூட இதில் அடக்கம். உங்கள் ஜெஸி அவள் கார்த்தியுடன் புணராமல் இருக்க வேண்டும் என்று நினைப்பதில் ஒன்றும் தவறு கிடையாது.  அதற்கு நீங்கள் கற்பு / பருப்பு  என்று வியாக்கினம் பேசி வேலைக்கு ஆகாது. உங்களிடமிருந்து கிடைக்க  வேண்டியது சரியாக கிடைத்துவிட்டால் இந்த படத்தில் வருவது போல கார்த்தியிடம்  எப்படி நைஸாக பேசி அந்த நிலைமை சாதுரியமாக கையாண்டலோ, அதை நிஜ ஜெஸிகள் இன்னும் சிறப்பாக செய்து விடுவார்கள். மேல உங்களிடம் அவளுக்கு வேண்டியதென்று நான்  குறிப்பிட்டது உங்கள் நீண்ட ஆண்குறியை அல்ல!  அன்பும், அரவணைப்பும்.  பிறகு தான் படுக்கை.  இல்லை. நான் எப்படி இருந்தாலும்  நீ கண்ணகியாக தான் வாழவேண்டும் என்று நினைத்தால். புணருதலையே பிறவி நோக்கமாக வைத்து வெறியுடன் அலைந்து கொண்டிருக்கும் மங்கோலிய ஓநாய்களுக்கு ஒப்பான சில கார்த்திகளிடம்

பிரயாணக் கட்டுரைகள்

Image
தமிழ் நாட்டை சேர்ந்த  ஏ. கே. செட்டியார் 1947 இல் எழுதிய "பிரயாணக் கட்டுரைகள்" என்ற நூலில் இலங்கை பயணம் சார்ந்த கட்டுரைகளில் கண்டியை பற்றி எழுதியிருந்த சுவாரசியமான குறிப்பை கீழே பகிர்ந்துள்ளேன், வாசித்து பாருங்கள்.  *** இலங்கையில் சாமான்களின்  விலை மிகக் கிராக்கி.  சில சாமான்கள் சில பகுதிகளிலே என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காது. கண்டிப் பகுதிகளில் சிலர் ஒரு வேளை தான் சோறு சாப்பிடுகின்றனர். மற்றொரு  வேளை ரொட்டி, பழம் முதலியவை தான். வெண்மையான சோறு பார்ப்பது அபூர்வம். பொதுவாகச் சோறுநவரத்தினங்களைப் போல  பல நிறங்கள் உள்ளதாக இருக்கும். இந்த சோற்றை பார்த்த பின்னர் தான், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு பலர் ஏன் அடிக்கடி வருகின்றனர் என்ற விஷயம் விளங்கிற்று. ஒரு வாழைப் பழத்தின் விலை  கால் ரூபாய் முதல் அரை ரூபாய் வரை, காலத்துக்குக்கும் இடத்துக்கும் தக்கபடி இருக்கும். சில சமயங்களில் முட்டை ஒன்று அரை ரூபாய் வரை விற்பனையாகும். உளுந்து கிடைப்பது கஷ்டம். கஷ்டப்பட்டுக் கிடைத்தாலும் கொத்து ஒன்று, நான்கு அல்லது ஐந்து ரூபாய் இருக்கும். கொத்து என்பது அரைப்படிக்குச் சிறிது அதிகமானது. வெங

ஓநாய் குலச்சின்னம்

Image
நூல்: ஓநாய் குலச்சின்னம்  ஆசிரியர் : ஜியோங் ரோங் (சீன நாவல்)  தமிழில் : சி.மோகன் மங்கோலிய பேரரசன் செங்கிஸ்கானை பற்றி கேள்விபட்டுருப்பீர்கள்.  ஒரு காலத்தில் ரஷ்யா, சீனா,  பாரசீகம் முதற்கொண்டு மற்றும்  சில ஐரோப்பிய நாடுகளையெல்லாம் கைப்பற்றி தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்தவர். இந்தியாவின் மீதுகூட படையெடுப்பை மேற்கொண்டு எல்லை வரைக்கும் வந்தார். சிந்து நதியினதும், இமயமலையினதும் இயற்கையான அரணை தாண்டி உள்நுழைய முடியாமல் போனதால் தப்பித்ததாக வரலாறு. அந்த குறையை பின்னர் அவரின் வம்சாவளியில் வந்த துருக்கிய மங்கோலியனான தைமூர் நிவர்த்தி செய்தான். சிந்து நதியில் படகுகளை தொடர்ச்சியாக நிறுத்தி பாலம் போல அமைத்து இலகுவாக பாரதத்தினுள் நுழைந்து டெல்லியின் மீது படையெடுத்து தன் போர் தந்திரங்களால் இலகுவாக வெற்றி அடைந்தான். அதற்கு பிறகு  அவன் நிகழ்த்திய வெறியாட்டத்தில் கிட்டதட்ட மூன்று தொடக்கம் ஐந்து லட்சம் பேர் வரைக்கும் கொடூரமாக வெட்டி சாய்க்கப் பட்டார்கள்.   செங்கிஸ்கானின் படை வருகிறது  என்றால் காலுடன் மூத்திரம்  போய்விடும் அளவுக்கு அச்சப்பட்டு  போய்விடுவார்களாம் எதிரி நாட்டு  வீரர்க