Posts

Showing posts from September 14, 2019

பிக்பாஸ் 3

Image
லாஸ்லியா கவினை காதலிச்சது ஒன்னும் மகாபாவம் கிடையாது பிக் பாஸ் ஷோவில் ஷெரின் தர்ஷன் நட்பு அளவுக்கு கூட லாஸ் கவின் காதல் ரசிக்க படாமல் போனதற்கு காரணம் கவின் ஆரம்பத்தில் விளையாட்டை செய்த பல காதல் குளறுபடிகள் தான். சாக்க்ஷி உடனான உறவில் விரிசல் விழுந்த மறுகணம் சிறு இடைவேளை விடாது லாஸ்லியாவுடன் காதல் வயப்பட்டது ஒப்பவில்லை. ஓரு வேலை ஆரம்பம் தொடக்கம் கவின் லாஸ்லியாவுடன் மட்டும் நேசத்தில் இருந்திருந்தால் இன்று நிலைமை வேறுமாதிரி இருந்திருக்கும். நம் கண்களுக்கு அந்த உறவு பேரழகாக தோன்றியிருக்கும். கவினும் மோசமானவன் இல்லை. நேர்மையானவன் தான் பாவம் அவன் நேரம் சரியில்லை. லாஸ்லியாவின் அப்பா அவளின் மேல் கோவப்பட்டது நியாயமே. மிடில் கிளாஸ் கலாச்சாரத்தில் பல கோடி மக்கள் பார்க்கும் ஓரு ரியாலிட்டி ஷோவில் தன்பிள்ளை காதல் வயப்படுவதையும், சமூகம் அதை மொசமாக வசைப்பாடுவதையும்  அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னத்தான் பெண்ணியம், பெண்சுதந்திரம் பற்றி பேசினாலும் நம் பெண் பிள்ளைக்கு தகப்பனாகும் போது அதை அப்படியே பிரயோகிக்க இயலாது. ஊர் வாய்க்கு பயந்தே வாழவேண்டிய நிலைமை. பெண்களின் கால்களுக்கு இடையில்  கல

தேவதையில்லா உலகு !

எனக்கு இந்த தமிழ் படங்களில் காட்டுவாங்களே ஐடி ஆபீஸ் அதுல மாதிரி சுற்றி வர அழகான பொண்ணுங்களுக்கு மத்தியில வேர்க் பண்ணனும்முனு தான் ஆசை! என்ன பாவம் பண்ணுனேனு தெரியல கடவுள் சவூதி அரேபியாவில் கொண்டு வந்து விட்டுட்டான். இப்போ வேலை பண்ற இடத்துல என்னை சுற்றி எப்பவும் தாடியும் மீசையுமாவே இருக்கும்.  காலையிலேயே இந்த மூச்சிகளை பார்க்க கடுப்பா இருக்கும். ஒவ்வொரு நாளும் வேலைக்கு போறது ஒன்னாம் கிளாஸ் படிக்கும் போது ஸ்கூல் போக எப்படி கஷ்டமா இருக்குமோ அதே பீலிங்!  இதுல இருக்க ஓரு நல்ல விஷயம் என்னனா டிரஸ் வாங்குற காசு, சோப்பு, கிரீம், முடி வெட்டுற காசு என எல்லாம் மிச்சம். பொதுவா  அழகுபடுத்திக்கவே தோணாது. கிழிஞ்ச சட்டையை போட்டுக்கிட்டு ஆபீஸ்ல போய்ட்டு உக்காந்து இருப்பேன். அழகா உடுத்திட்டு வந்து யாரு பாக்கபோறாணு தோணும். பெண்கள் இல்லாத இடம் நரகம்! சவூதியில ஹாஸ்பிடல், ஸ்கூல் தவிர வேறு எங்கும் வெளிநாட்டு பெண்கள்   வேலைப்பார்க்க அனுமதியில்லை. இப்போ அங்கங்கே சில நிறுவனங்களின் அக்கௌன்ட் சேக்சன்ல சிலர பார்க்க முடியுது. ஆனால் இந்நாட்டு பெண்களுக்கு அந்த கட்டுப்பாடுயில்லை வேறு துறைகளிலும் நிறுவனங்கள

சொல்லாததும் உண்மை

Image
ஆசிரியர்: பிரகாஷ்ராஜ் என் நண்பர்  "நரேஷ் எனக்கு ரொம்ப பிடிச்ச புத்தகம் இது, படிச்சிட்டு ரிவியூ போடுங்கனு" சொன்னதும் தமிழில் மட்டுமே படித்து முடிக்க எத்தனையோ இலக்கிய ஆளுமைகள் இருக்கும் பொழுது இதை இப்போ வாசிக்கணுமா? ஓரு நடிகன் பெருசா எண்ணத்தை எழுதிட முடியுமுன்னு? நினைச்சுக்கிட்டேன். சரி வாசித்து பார்ப்போம். காரணம் இதை பரிந்துரை செய்த நண்பர் என்னை விட இலக்கிய பரீட்சயம் உள்ளவர். எதோ விஷயம் இருக்குமுன்னு மனசுல தோணுச்சி வாசிக்க முடிவு பண்ணினேன். படிக்க ஆரம்பிச்சு ஒவ்வொரு பக்கமாக புரட்டும் போதும் என்னோட தவறான முன் கணிப்பை நினைத்து வெட்கி தலை குனிந்தேன். இலகுவான மொழிநடையில் கருத்து செறிவு நிறைந்த முத்தான ஐம்பது கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு இன் நூல். எந்த ஓரு கட்டுரையும் சும்மா எழுதணும் என்பதற்காக சப்பை கட்டு கட்டியதாக தெரியவில்லை. மாறாக; உறவுகள், சினிமா, காதல், காமம், இயற்கை, ஹாடோனிசம், மொழி, கலாசாரம். என எல்லாம் அம்சங்களையும் அடக்கி லாவகமாகவும் சுவையாகவும்  சொல்ல வந்த விஷயத்தை தெள்ளத்தெளிவாக பதிவு செஞ்சிருக்காரு. கன்னடத்தை தாய் மொழியாக கொண்டாலும் இவரின் தமிழ் பு

ஊரிலே மிக அழகான பெண்!

ஊரிலே மிக அழகான பெண்ணொருத்தி தனக்கு ஆண் துணை தேவையில்லை என்றும். தனிமையை நேசிப்பதாகவும் இப்படியே மிகுதிநாட்களையும் வாழ்ந்து விடபோகவதாகும் புலம்பிகொண்டு இருந்தால். ஒருவேளை அவள் சொல்லுவது நிஜமாகயிருக்கும் பட்சத்தில் அதை விட ஓரு கொடும் செயல் இந்த உலகத்தில் எதுவும் கிடையாது! கைதேர்ந்த சமையல் வல்லுனரினால் தயாரிக்கபட்ட ஓரு அரும்சுவை உணவு பண்டம் ருசிபார்க்கப்படாமலே வீணடிக்கப்படுவது மகாபாவம்! எனக்கு தெரிந்து அவள் உரைப்பது பொய். தனிமை தந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான் அந்த உளறல்கள். அவளின் தேகம் பசலை கொள்ள ஆரம்பித்துவிட்டது. இப்பொழுது தேவையேல்லாம் இறுக்கி பற்றி கொள்ள அவனின் கைகளும், முகம் சாய்த்து புதைந்து தொலைய அவன்  நெஞ்சும் மட்டுமே! இதில் முரண்நகை என்னவென்றால் பெரும்பாலான நேரங்களில் அந்த உணவு ருசிக்க தெரியாதவனின் தட்டிலேயே பரிமாறபடுகின்றது.

இரண்டு மாம்பழங்கள்

நேற்று வார இறுதி நாள்னாள சந்தைக்கு போயிருந்தேன். பொன்னிறமான இரண்டு மாங்கனிகள் கண்ணில்பட்டுச்சு கிலோ இருபது சவூதி ரியாலுனு விலை இருந்தது பழத்தை கையில எடுத்து சில நிமிடங்கள் அடிக்கிடிபட்டிருக்கான்னு தீவிரமா பரிசோதனை பண்ணி ஒருவாறு ரெண்டு பழத்தை தெரிவு செஞ்சு பில் பண்ணுனா பதினச்சு ரியால் வந்துச்சு. நம்ப ஊரு காசு 700.00 ரூபாய். ஐயோ முதலாளிகிட்ட புடுங்கல்பட்டு சம்பாதிக்கிற காசு எல்லாம் இப்படி கனி வாங்கியே கரியா போகுதுனு மனசுல புலம்பிகிட்டேன்.  இதுனால் தான் சந்தைக்கு போனால் மாம்பழங்கள் இருக்க பக்கம் திரும்பி கூட பார்க்கமாட்டேன். சில சமயங்களில் தெரியாம கண்ணுல பட்டுட்டா மதி மயங்கி X லவ்வரை ஏக்கத்துடன் பார்ப்பது போல் பார்த்து திடீருன்னு சுதாகரிச்சுகிட்டு "சீ இந்த பழம் புளிக்குமுன்னு அந்த பக்கமா ஓடிடுவேன்"  முதல் ஒருவருடம் அப்படித்தான் ஓடியது. இப்போ ஐந்து வருடங்கள் முடிய போகுது. எப்போ ஊருக்கு போறதுன்னு என்ற கேள்விக்கு உண்மையாவே விடை தெரியல. போறபோக்க பார்த்தா முதலாளி கழுத்த பிடுச்சு ஊருக்கு பறக்கும் பிலைட் உள்ளுக்கு தள்ளும் மட்டும் போக மாட்டேன். "இன்னைக்கு செத்தால் நாளைக்க