ராமர் கோயில் அரசியல்
ஹோமோ செபியன்ஸ் இருக்கும் மட்டும், மதம், நாடு, ஜாதி, சொர்க்கம், நரகம் போன்ற கற்பனை கதைகளும் இருக்கும். அவற்றால் மட்டும் தான் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமில்லாத பெரும் மனிதக் கூட்டத்தை ஒரு கொள்கையின் கீழ் ஒன்று சேர்க்க முடியும். எதிர்காலத்தில் கூர்ப்பின் மூலம் எம்மைவிடவும் மேம்பட்ட அதிமனிதர்கள் உருவாகும் போது இன் நிலைமை மாறிவிடும். அதற்கு பிறகு தோன்றும் புதிய மதத்தில் புராதான கிரேக்க கடவுள்களை போல இப்போதைய கடவுள்கள் சக்தியை இழந்து இருப்பார்கள். அங்கு வேறு ஒரு கடவுள் ஆட்சி செய்து கொண்டிருப்பார். அவருக்கு இப்போதைக்கு பெயர் வைப்பதும், வல்லமைகளை வரையறை செய்வதும் கடினம். காரணம் அப்பொழுது நாம் அழிந்து இருப்போம் அல்லது அழிந்து கொண்டிருப்போம். அதிமனிதர்களுக்கும் நமக்குமான வித்தியாசம் நியாண்டதால் மனிதர்களுக்கும் ஹோமோ செபியன்ஸ்க்கும் இருக்கும் வேற்றுமையை விட சிக்கலானது.