Posts

Showing posts from May 11, 2020

எங்கே உன் கடவுள் ?

Image
நான் இந்து மதத்தை நேசிப்பவன்,  தமிழ் மொழியின் மீதும், கலாசாரத்தின் மீதும் மிகுந்த  பற்றும் மரியாதையும் உடையவன். கவனிக்க, ஆனால் இவை எதன் மீதும் வெறித்தனமான ஈடுபாடு கொண்டவன் அல்ல.,  என் நம்பிக்கையும், மரபையும், பண்பாட்டையும் சுயவிமர்சனம் செய்து கொள்வதற்கான சுகந்திரத்தை இந்து மதம் எனக்கு அளித்தது. அதனால் அறிவையும் புரிதலையும் வளர்த்து கொள்ள முடிந்தது. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு ஆனால் என் கடவுளுக்கு மதமில்லை. மொழி பற்றுண்டு இனவெறியில்லை. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எல்லா  ஊரும் என் ஊர், எல்லா  மொழியும் என் மொழி.  எல்லோரும் ஹோமோசெபியன்  என்ற கொள்கையில் வாழ்பவன்.  விடலை பருவத்தில் திடீர் என உதிக்கும் ஞானத்தில் இந்து மதத்தில் உள்ள புராணங்களையும், நம்பிக்கைகளையும் கேலிக்கு உள்ளாக்கி விமர்சிப்பவர்களை பார்க்கும் போது பாவமாக இருக்கும்.  நானும் " பிக் பேங்க் தியரியை " ,  "டார்வினின் கூர்ப்பு கொள்கையையும்" , அறிந்து கொண்ட புதிதில் திமிறியபடி பாட்டியுடன் "எங்கே உன் கடவுள்? காட்டுனு" விதண்டாவாதம் செய்தவன் தான். அவள் என்னை பார்த்து புன்னகைத்தபடி &

வாசிப்பு

Image
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அடிபட்டு அந்த அனுபவங்கள் என்னை பண்படுத்திவிட்டது என்று நினைத்து கொண்டிருந்தேன். புதிதாய் வேறு ஒரு சூழலில் நுழையும் போது அங்கு எதிர்பாராத விதத்தில் வாழ்க்கை  புரட்டி போட்டு மிதிக்க ஆரம்பிக்கும்.  " என்ன மயிறு வாழ்க்கைடா? "  இதுவென்று வெறுத்துபோய் திக்கற்று நிற்கும் போதுதான் உணர்ந்தேன் மரணம் மட்டும் நீ ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும்  நின்று புலம்பி கொண்டிருப்பதால் இங்கு ஒன்றும் மாறிவிட போவதில்லை என்பதை.  அப்படிபட்ட கையறு நிலையில்தான்  என்னை வழிநடத்தும் குருவாக புத்தகங்கள் அமைந்தன   இலக்கிய வாசிப்பில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தேன் பிறகுதான் புரிந்தது வாழ்க்கையில் பல கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்க கூடாது,  அதன் போக்கில் நாம் நகர்ந்து விடவேண்டும் என்பதை.  புத்தகம் என் உற்ற நண்பன்  அவன் மட்டும் தான் என்னுடன் கடைசி மட்டும் வருவான்.  சோர்ந்து துவண்டு  விழும் போதெல்லாம் கை  கொடுத்து எழுப்பிவிடுகிறான். ஹாடோனிஸ்டாக வாழ கற்றுக் கொடுத்தான். இப்பொழுதெல்லாம் வாழ்க்கையை நேசிக்கவும் கொண்டாடவும் ஆரம்பித்து விட்டேன்.