Posts

Showing posts from December 8, 2019

காதலிக்கு சொல்லக்கூடாத கதை

நான் பத்தாம் அல்லது பதினோராம் வகுப்பு படிக்கும் போது இந்து சமயப்பாடத்தில் இளையான்குடிமாற நாயனாரின் கதையொன்று இருந்தது. எனக்கு ரொம்ப பிடிக்கும். முதலில் கதையை சொல்லிடுறேன். இளையான்குடிமாறநாயனார் மிகத்தீவிரமான சிவபக்தர். எம்பெருமான் மீது மிகுந்த அன்புடையவர். பசியென்றுவரும் சிவனடியார்களுக்கு இல்லன்னு சொல்லாம வயிறார சாப்பாடு போட்டு அனுப்புவார். எந்த சூழ்நிலையிலும் தவறாமல் அப்பணியினை மேற்கொண்டு வருகிறார். கடவுளின் அருளால் அவருக்கு மேலும், மேலும் செல்வமும் வளமும் பெருகுது. இப்படியெல்லாம் சுமூகமாக போய்ட்டு இருக்கும் போது சிவபெருமான் அவரின் பக்தியை சோதிச்சு பார்க்க முடிவுபண்ணுறாரு. சிவனுக்கு இதுதான் வேலையே! தன்னுடைய தீவிர பக்தர்களுக்கு தாங்க முடியாத அளவுக்கு கஷ்டத்தை கொடுத்து டார்ச்சர் பண்ணுவாரு.  இவர் கொடுக்குற கஷ்டத்தை தாங்க முடியாமல் அவர்கள் வேறு மதத்துக்கு மாறிப்போகாமல் இருந்தது பெரிய விஷயம். அந்த அளவுக்கு டார்ச்சர் லெவல் இருக்கும். ஆனால் இதையெல்லாம் காரணமாக சொல்லி நாயன்மார்கள் போகமாட்டாங்க. சிவன் மேல்  தீராக்காதல் அவர்களுக்கு. (ஆனால் குடியானவர்கள் யாரும் அப்படி போகவும் முடியாது. இந்

தன்னம்பிக்கையும் அதிர்ஷ்டமும்

Image
சைபர் செக்யூரிட்டி தொடர்பான செமினார் ஓன்றுக்கு வேலை பார்க்கும் கம்பெனி சார்பாக நானும் இன்னொரு நண்பரும் உயர்தர நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு போகும் வாய்ப்பு கிடைத்தது. அதை பற்றிய அனுபவபதிவுதான் இது.  மிக பிரமாண்டமான கட்டிடம் என் கைத்தொலைபேசியின் கேமராவாள் முழுவதையும் ஒரே படத்தில் உள்ளடக்க முடியாத அளவில் இருந்தது.  (இப்பொழுது பரப்பளவை கற்பனை செய்து கொள்ளுங்கள்) அரண்மனையின் வடிவில் வடிவமைக்கபட்ட கட்டிடம். பிரதான மண்டபத்தின் கதவு ஒவ்வொன்றும் ராட்சஸ அளவில் காணப்பட்டன. யானை ஒன்று இலகுவாக புகுந்து போகும் அளவு அகலமும். ஒட்டக சிவிங்கியொன்று எவ்வித சிரமமும் இல்லாமல் நிமிர்ந்து போகும் அளவுக்கு உயரமாகவும் காணப்பட்டது. சுவர்களில் நூதனமாக தீட்டப்பட்டு மாட்டப்பட்டிருந்த கிறுக்கல்  ஓவியங்களையும் பார்க்க முடிந்தது. இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் நா வருவேன்னு நினைச்சு கூட பார்க்கல!? இவ் அனுபவம் என் வாழ்நாள் அதிர்ஷ்டம். ஆனால் எதுவும் இலகுவாக கிடைத்து விடாது. அதற்கு உண்டான விலையை கொடுத்தாகணும். இந்த செமினார்ல நான் பார்த்து வியந்த விஷயம் சில வருடங்களுக்கு முன்பு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடு

ராஸலீலா

Image
மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ராஸலீலா நாவலை ஒருவாறு படித்து முடித்தாயிற்று. இப்பொழுது நூலை பற்றி சிறுகுறிப்பு எழுதியாகவேண்டும். எதை பற்றி எழுதுவதென்று தான் தெரியவில்லை. ஏனென்றால் சாருவின் நாவல்களில் கதையிருக்காது. கதைகள் தான் இருக்கும். எதை தொட? எதை விட? எனச்சிறுகுழப்பம். இதுவரை 'புதிய எக்ஸ்ஸைல்' , 'ஸிரோ டிகிரி' , 'ராஸலீலா' போன்ற பிரதான நாவல்கள் உட்பட சாருவின் பத்து புத்தகங்களை படித்து முடித்து விட்டதில் அவரின் எழுத்தை எப்படி அணுகவேண்டும் எனப்புரிதல் வந்துள்ளது.  தீவிர இலக்கிய நூல்களை மட்டும் படிப்பவர்களாக இருந்தால் அதன் பாங்கையே சாருவின் படைப்புகளில் தேடி ஏமாந்து போவீர்கள். இது வேறு ஒரு உலகம். அற்புதமான உன்னத அனுபவம். உங்களை புதிய தேடலுக்கு  உற்படுத்தி கொள்ளத்தயார் என்றால் பேரின்பம் காத்திருக்கின்றது. எழுத்துக்கு ஒரு சுவையுண்டு ஒவ்வொரு எழுத்தாளரும் அவர்கள் பாணியில் படைத்து தருவார்கள். சுவைத்து பார்த்து பிடித்ததை நுகர்வது தான் நம்வேலை. அந்த வகையில் சாருவின் எழுத்து தனிப்பட்ட வகையறா எல்லோருக்கும் லாவகமாக வந்து விடாது. ஆனால் வாசிப்பில் தீவிரமாக இலக்கி

தீராக்காதலி

Image
ஹாய்... எப்படி இருக்கீங்க?  நல்லா இருக்கீங்களா? சாப்பிட்டாச்சா? என் மேல கோவமா? பரவால்ல கோவிச்சிக்கிறுக்குங்க ஆனா சந்தோசமா இருங்க. ஹாய்... நா நல்லா இருக்கேன்.  நீ எப்படி இருக்க? ஓஹோ... தேங்க்யு சார் !  நா எதோ இருக்கேன். என் மேல நீங்க கோவமில்லையா? எந்த காரணமும் சொல்லாம  உங்களை விட்டு போனதுக்கு? பரவால்ல. பேசுனத்துக்கு தேங்க்ஸ் நீங்க நல்லாயிருந்தா எனக்கு அது போதும். போறது தான் போனே, ஒரேடியா விட்டு போக வேண்டியது தானேடி?  பிறந்த நாளைக்கு கேக்குக்கு பதிலா  என்னை வெட்டிட்டு போகலாமுன்னு வந்தியா? அது எப்படி டீ? நீயே கொன்னு போட்டுட்டு சாக துடிச்சிகிட்டுயிருக்கவன் கிட்ட வந்து நீ இன்னும் உயிரோடதான் இருக்கிறியான்னு கேக்குற மாதிரி கேசுவலா சார் போட்டு பேசுற? கொஞ்சம் கூடவா உனக்கு வலிக்கல? கல்நெஞ்சுகாரிடி நீ! நீ பண்ணுனது எப்படி இருக்கு தெரியுமா? ஒரு பாவமும் அறியாத அப்பாவியை தூக்கு மேடையில் ஏற்றிய உடன் கேட்டானாம். எதற்கு ஐயா எனக்கு இந்த  தண்டனை? என்ன தவறு செய்தேனு சரி சொல்லுங்க. காரணம் தெரியாமல் எனக்கு உயிரை விட ஆசையில்லை என்றதுக்கு அந்த அதிகாரி சொல்லமாட்டேன்.

Chat with கிறுக்கி

Image
   என்னை பற்றியெல்லாம் எழுதமாட்டியா? எழுதலாம். அதுக்கு நீ என்னிடம் இன்னும் நெருங்கி வரணும் ஐயே.... தேவல்லயே  இல்லடி..., நான் அந்த அர்த்தத்தில் சொல்லவரல. தப்பா புரிஞ்சிக்காத. நாம இப்பே தானே பேச ஆரம்பிச்சு இருக்கோம். இன்னும் நெருக்கமா பழகணும். அப்போ தான் எழுத முடியுமுன்னு சொல்லவந்தேன். (இந்த உரையாடலின் இடையே சில நேனோ செக்கன்கள் குறுக்கிட்ட என் மனது "டேய் நீ அவளை வேணும்னா ஏமாத்தலாம் என்கிட்ட முடியாது. உண்மையை சொல்லு, நீ இரட்டை அர்த்தத்தில் தானே சொன்ன? " ஆமா சும்மா பேச்சின்  சுவாரசியக்காக சொன்னேன். அதுக்கு ஏன்டா என்னை வில்லனாக்க பாக்குற?)  இப்படி அரட்டையின் வழியே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நட்பு வளர்த்து கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு பிறகு  நான்  குட் மோர்னிங் டியர்  பதில் இல்லை மறுநாளும் நான்  குட் மோர்னிங்  பதில் இல்லை   கிறுக்கி, லூசு, நாய்.. மூன்றாம் நாள் அவளிடம் இருந்து பதில் வந்தது. ஹாய்...  எதுக்கு இப்படி திட்டுற...? ஒரு மெசேஜ் இல்லை...,  குட் மோர்னிங் சொன்னாலும் பதில் இல்லை.. ஓ...

வெள்ளிக்கிழமை பிரியாணி

Image
என் அப்பார்ட்மெண்டுக்கு பக்கத்துல மலையாள பூப்பிய்யா ஒன்னு இருக்கு (சிறிய சாப்பாட்டு கடைகளை இங்கே  பூப்பியான்னு சொல்லுவாங்க. "பூப்" என்பதை "பூ" வுக்கு முன்பு "ப்" சேர்த்து அழுத்தம் கூட்டி வாசிங்க) அங்கு வெள்ளிக்கிழமை நாட்களில் மட்டும் ஸ்பேஷலா பிரியாணி கிடைக்கும். அது ஏன்னா?  வெள்ளிக்கிழமை தான் சவூதியின் வாரஇறுதி விடுமுறை நாள்.  நம்ப ஊருல ஞாயிறுமாதிரி. கோழி பிரியாணி, மட்டன் பிரியாணி, மீன் பிரியாணி, செம்மீனு பிரியாணி (இறாலுக்கு மலையாளத்தில் செம்மீனுன்னு பெயர்) வேறு எங்கும் கிடைக்காத இன்னொரு ஸ்பெஷல் ஐட்டமும் கிடைக்கும். அதுதான் ஒட்டக பிரியாணி பொதுவா எல்லா சாப்பாட்டு கடையிலும் கிடைக்காது. எனக்கு தெரிந்து இங்கு மட்டும் தான்.  ஆரம்பத்தில் எனக்கு பெரிதாக பிரியாணி மீது நாட்டமில்லை. காரணம் கோழி கறியில் சோற்றை போட்டு கிண்டி பிரியாணின்னு பேர் வைச்சு கொடுப்பானுக. இறைச்சி துண்டேயிருக்காது. ஆனால் இங்கு சாப்பிட்ட பிறகுதான் அசல் பிரியாணி எதுவென்று  தெரிந்துகொண்டேன். பாஸ்மதி அரிசியை நல்ல பதமா வேகவைத்து. வஞ்சகமே இல்லாம கஜூ, உலர் திராட்சை, ஏலக்காய், க

ஜல்லிக்கட்டு

Image
2019 / மலையாளம்  சில நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியில் பனியுகம் உருவாகி வருடக்கணக்காக நீளும். அக்காலகட்டத்தில் பூமியின் மேற்பரப்பு முழுவதும் ஐஸ்கட்டியாளும் பனியினாலும் மூடிக்கிடக்கும். இந்த புவி உருவாகியகாலம் தொன்றுதொட்டு நிகழும் ஒரு காலநிலை மாற்றம். இப்பொழுது அதற்கு இடைப்பட்ட காலத்தில் தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  மனிதஇனம் உருவாக தொடங்கிய  யுகத்தின் ஆரம்பகாலக்கட்டத்தில் இது போன்று ஒரு அசாதாரண காலநிலை உருவாகிய பொழுது அதுவரை தாவர பட்சிணியாக  கனிகளையும், கிழக்குகளையும், இலைதளையும் உணவாக உட்கொண்டிருந்த நாம் பனியுகத்தில் பெரும்பாலான தாவரங்கள் எல்லாம் அழித்து போனதால் ஆகாரம் எதுவும் கிடைக்காமல் பசியால்வாட நேர்ந்தது. உடனே மாற்றி யோசிக்க ஆரம்பித்த மனிதன் அன்று தொடக்கம் விலங்குகளை வேட்டையாடி உணவாக உண்ண ஆரம்பித்தான்.  பரிணாமத்தில் நம்மை விட பின்தங்கிய இன்னொரு மனித இனமான நியண்டதல் மனிதர்கள் அழிந்து போனதற்கு அவர்கள் உணவாக மாமிசத்தை உண்ண மறுத்தது பிரதானமான காரணம். கடைசியில் தாவர உணவு கிடைக்காமல் பட்டினியால் பூண்டோடு மடிந்து போனார்கள். கற்காலத்தில் உணவுக்காக விலங்கு

காலம் மாறிப்போச்சு

முன்குறிப்பு: இது சினிமா விமர்சனம் அல்ல  சவூதி அரேபியாவில் நான் வசிக்கும் ஊரின் பெயர் தமாம். இந்த வருடத்தின் நடுவில்தான் சினிமா தியேட்டர் வந்தது. பொதுவாக ஹாலிவுட், பாலிவுட் சினிமாக்கள் மட்டும்தான் வெளியிடப்படும். அரபு தேசத்தில் தமிழ் படமொன்றை திரையில் பார்த்தால் எப்படியிருக்கும் என்று அங்கலாய்த்த நாட்களும் உண்டு. எதிர்பார்த்த நாளும் வந்தது.  முதல் முதலாக திரையிடப்பட்ட தமிழ் படம் பிகில் , நிறைய எதிர்மறையான விமர்சனம் வந்ததினால் பார்க்கும் விருப்பமில்லை.  ஒரு முறை பார்க்கலாம் அவ்வளவு மொக்கையெல்லாம் இல்லன்னு கேள்விப்பட்டதும். என்னதான் இருந்தாலும் தமிழ்படத்தை திரையில் காண்பது தனி சந்தோசம் என்பதாலும் பார்க்கலாமுன்னு முடிவு செய்தோம். ஒரு வாரத்திற்கு முன்பே திட்டங்களை வகுத்து. ஒரு வியாழன் இரவு பார்க்க போவதாக முடிவாயிற்று. நம்ம நாட்டுல  ஞாயிறு விடுமுறை நாள் மாதிரி இங்கு வெள்ளி விடுமுறை. ஆறுநாள் தொடர்ந்து வேலை பளுவில் மண்டை காய்ச்சு போய்ட்டு இருப்போம். வியாழன் வரும் பொழுது கொண்டாட்ட மனநிலை தொற்றி கொள்ளும். வியாழன் இரவு முதல்  வெள்ளிக்கிழமை இரவு வரை தொடரும். இதுவே வியாழக்கிழம

Scared Games (2018)

Image
Season 1 No Spoilers  இந்த வெப் சீரிஸ்ச பற்றி பெரிதாக எதுவும் ஆராயாமல் பார்க்க முடிவு பண்ணுனேன். அதற்கு ரெண்டு பேர் காரணம் ஒன்னு நவாஸுதீன் சித்திக்கி மற்றையது அனுரக் காசியப். அதுவும் கேங்ஸ்டர் சப்ஜெக்ட்ன்னா சொல்லவே வேணாம். Gangs of Wasseypur பார்த்த மிரட்டலே இன்னும் அப்படியே மனசுலயிருக்கு. மாஸ்டர் பீஸ்! கிட்ட தட்ட அதே அனுபவம் தான் Sacred Games. அதை விடக்கதையை உள்வாங்கி புரிந்துகொள்ள கொஞ்சம் இலகுவாயிருக்கு.   கதை சுருக்கம் இதுதான்; கதை மும்பையில் நடக்குது Sartaj singh (Saif Ali Khan) நீதி நேர்மைன்னு வாழும் ஒரு போலீஸ் அதிகாரி. இதனாலேயே மேல் அதிகாரிக்கிட்ட சுமூகமான உறவுயில்லை. சில உறவு சிக்கல்களினால் மனைவியும் உடனில்லை. இவையெல்லாம் சேர்ந்து சர்தாஜ்யை  மனஅழுத்தத்துக்கு உள்ளாக்குது. இறுக்கமான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்காரு. ஏதாச்சும் பெருசா பண்ணி தன்னை நிரூபிக்கவேண்டிய இக்கட்டான தருணம். இந்த மாதிரி சூழ்நிலையில் மர்ம ஆசாமிகிட்டயிருந்து போன் கோல் வருது. "இன்னும் எண்ணி 25 நாள்ல இந்த மும்பை நகரமே அழிய போகுது. எல்லோரும் சாக போறாங்க! " முடிஞ்சா காப்பாத்துன்னு சொல்லி

பூமணியின் வெக்கை

Image
ஒருவாறு வெற்றிமாறனின் புண்ணியத்தினால் வெக்கை நாவலை படிச்சு முடிச்சாச்சு. அசுரன் படத்தை பார்க்கும் வாய்ப்புதான் இன்னும்கிட்டல..., அதையும் பார்த்த பிறகு இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கணும். நாவலை திரைக்கதையாக்கிய நுட்பத்தை பற்றிய சிறுஅறிவு கிடைக்கும். (என்றே ஒரே காரணத்திற்காக மட்டுமே) சேர்த்து வெச்சிக்கிருவோம். எதிர்காலத்துல நான் படம் பண்ணும் போது உதவலாம்.  என்னை நானே வற்புறுத்தி நாவலை எனக்குள்ள திணிக்கல, வாசிக்க ஆரம்பிச்சேன் அதுவா கடைசிவரைக்கும் கூட்டிட்டு போயிடுச்சி. எனக்கு பிடிச்ச சர்வைவல் வகையறா வேறயா, இரட்டிப்பு சந்தோசம். அண்ணனை வஞ்சகமாக கொன்ற மேட்டூரானை பழிதீர்க்கும் சிதம்பரம் (தம்பி) போலீஸ்கிட்டயும், எதிரிங்ககிட்டயும் மாட்டாமல் சில நாட்களுக்கு அப்பாவுடன் சேர்ந்து காடு, மேடுனு சுத்தி திரியுறதுதான் கதை. உரையாடல் வழியே கதை சொல்லப்படும். சுவாரசியமாக போகும். மேற்கொண்டு எதுவும் சொல்லி ஸ்பாய்லர் பண்ணேமாட்டேன். நீங்களே படிச்சு பாருங்க.  பூமணியின் இதர நாவல்களையும் இப்பே வாசிப்பில் இருக்கும் சாருவின் "ராஸலீலா" முடிச்சதும் வாசிக்கனும். பூமணி எழுதிய மற்றைய நாவல்களுடன் ஒப்பிடு

சாருநிவேதிதா

Image
சமகால இலக்கியத்தின் மீதும் புத்தக வாசிப்பின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்திய ஆளுமை. சாதாரண சொற்களை கொண்டு இலக்கியம் படைக்கும் திறன் கொண்டவர். கவித்துவமாக புரியாத மாதிரி எழுதினால் தான் இலக்கியம் என்ற வரையறையை தாண்டியவர். அப்படி எழுத தெரியாதவரும்  இல்லை என்பதற்கு இவருடை "ஸிரோ டிகிரி" நாவல் சான்று.  "புதிய எக்ஸ்ஸைல்" என்ற நாவல் என் சிந்தனைகளில் மாற்றத்தை உண்டாக்கிய படைப்பு. நான் யார் என்பதை உணர்ந்து கொண்டேன்.  அதுவரை எப்படி ஓரு புத்தகம் மனிதனை மாற்ற முடியும்? என்ற ஐயம் எனக்குள்ளும் இருந்தது. இப்பொழுது வாசிப்பில் இருக்கும் "ராச லீலா" ஒருவேளை அந்த இடத்தை எடுத்து கொள்ளக்கூடும். சாரு உலகின் முக்கிய Transgressive எழுத்தாளர்களின் ஒருவராக கருதப்படுகின்றார். கட்டுப்பாடுகளே கிடையாது தான் சொல்ல வந்த கருத்தில் சமரசம் இன்றி உறுதியாக நிற்பவர். கலகக்காரன் இதனால் இவர் எதிர்கொள்ளும் எதிர்ப்புகள் ஏராளம். இவருடைய ஆட்டோப்பிக்சன் நாவல்கள்  மிக பிரபலம் அதுதான் இவரின் பலமும் கூட. லத்தீன் அமெரிக்க இலக்கியம், பிரெஞ்சு இலக்கியம், உலக இலக்கியம், தமிழ் இலக்கியம் என எல்