Posts

Showing posts from July 10, 2020

சூஃபியும் சுஜாதேயும்

Image
மொழி: மலையாளம்  "என் உயிரை உன்னுடன் எடுத்து  சென்றால், நான் என்ன செய்வேன்?" சூஃபியிசத்தை பற்றி வாசித்து உணர்த்திருக்கிறேன். ரூமியின் கவிதைகளை படிக்கும் போதும்  அனுபவித்து இருக்கிறேன். அதையே படமாக இரண்டு  மணிநேரம் திரையில் பார்த்த  அனுபவம் மாறுப்பட்ட உவகையை அளித்தது. ஓர் இந்து பெண்ணுக்கும்,  சூஃபி துறவிக்கும் இடையிலான  காதலே இந்த படம். ஆனால் இது  வெறும் கதையாக இல்லாமல் அமரகாவியமாகி போனது துயரம்தான். இதில் சூஃபி பள்ளியில் பாங்கு ஓதும்  போது " அல்லாஹ் கூ அஃபர்  அல்லாஹ்...! " என்ற அந்த கணீர் குரல் காதில் விழும் தருணத்தில் உணர்ந்த பேரின்பத்தை வார்த்தைகளில் விபரிக்க முடியாது. பாடல்களும் பின்னணி இசையும் தான் படமே, ஒளிப்பதிவை பற்றி சொல்லியே ஆகவேண்டும் படம் முழுவதும் ஒவ்வொரு காட்சியும் பேரழகு! ஓர் இடத்தில் சூஃபி நடனத்தை டாப் அங்கிள் ஷாட்டில் படமாக்கியது அற்புதம்!அதுமட்டுமல்ல சுஜாதேயும்,  சூஃபியும் வரும் இடங்கள் எல்லாமே ஓவியம்தான். Aditi Rao ஒரு  வார்த்தை கூட பேசாமல் படம்  முழுவதும் முகபாவனைகளிலே உணர்வுகளை சிறப்பாக வெளிக்காட்டியிருக்கிறார்.  இந்த படத்திற்கு கச்சித

கருப்பு மரணம்

Image
  2020ம் ஆண்டு உயிர்கொல்லி  கிருமிகளின் வருடம் போல, ஏற்கனவே கொரோனா தன் பங்கிற்கு வைத்து செய்து கொண்டிருக்கிறது. வெக்சின் வரும்  மட்டும், உயிருக்கு உத்தரவாதம்  கிடையாது. தற்போதைய நிலவரப்படி கொரோனா தடுப்பு மருந்து பாவனைக்கு  வர குறைந்தது அடுத்த வருடமாகும்.  இந்த லட்சனத்தில் சீனாவில் இம்மாதம் மட்டும் அடுத்தடுத்து இரண்டு உயிர்கொல்லி நோய் தொற்றுக்களை அடையாளம் கண்டுள்ளார்கள்.  பன்றி பண்ணையில் இருந்து  கோவிட்-19 நிகரான மோசமான வைரஸ் பரவல் இனம் காணப்பட்டது, ஆனால் அது இதுவரை மனிதர்களுக்கு பரவதொடங்கவில்லை.  ஒருவேளை மீறி பரவினால் நம்மால் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அழிவை ஏற்படுத்த கூடியது. இந்த செய்தியை படித்து சரியாக ஒருவாரம் கூட கடக்க முன்பு நேற்று புதிதாக புபோனிக் வகை பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட ஆடு மேய்ப்பவர் ஒருவரை சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மங்கோலியாவின் பயனுர் என்னும்  நகரில் இனங்கண்டு உள்ளார்கள்.  தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல் நிலை மோசமான கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவித்துள்ளார்கள். இது பாக்டீறியாவினால் பரவும் கொள்ளைநோய். 14ம் நூற்றாண்டில் கருப்பு மரணம் என்றழைக்கப்பட்ட

கொரோனா தடுப்பு மருந்து

Image
பிரிட்டனை சேர்ந்த லண்டன்  இம்பிரியல் கல்லூரி ஆய்வாளர்களால் கொரோனாவுக்கு கண்டுபிடிக்கபட்ட  தடுப்பு மருந்து விலங்குகளின்  மீது செய்யபட்ட பரிசோதனையில் பாதுகாப்பானதும் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியதால் அடுத்தகட்டமாக மனிதர்களின் மீது சோதனையை தொடங்கபட்டுள்ளது. ஆக்ஸ்போர்ட் கல்லுரி ஆய்வாளர்கள் ஏற்கனவே மனிதர்கள் மீதான பரிசோதனையை தொடங்கி விட்டார்கள். இதே போல உலக  நாடுகளை சேர்ந்த  120 வெவ்வேறான பரிசோதனை கூடங்களில் தனித்தனியான  ஆய்வுகள் நடத்து கொண்டிருக்கிறது.  முதல் கட்டமாக முந்நூறு தன்ஆர்வலர்களுக்கு புதிய  தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.  இரண்டாம் கட்டமாக அக்டோபர் மாதம் மேலும் 6000 பேருக்கு மீண்டும் இந்த  தடுப்பு மருந்தை செலுத்தி  பக்கவிளைவுகள் இல்லாமல்   நோயெதிர்ப்பு சக்தியை சிறப்பாக தூண்டுகிறதா என்று உறுதிப்படுத்தி கொள்வார்கள்.  அந்த சோதனை  முடிவுகளும் சரியாக வரும் பட்சத்தில் உற்பத்தி தொடங்கப்பட்டு 2021 ஆண்டின் ஆரம்பத்தில் பிரிட்டன் மற்றும் செல்வந்த நாடுகளுக்கும், பிறகு வளர்த்து வரும் நாடுகள், ஏழ்மை நாடுகளுக்கும்  கிடைக்கும். இந்த மருந்தில் உள்ள  விசேஷம் என்னவென்றால் ஒரு