Posts

Showing posts from May 12, 2020

கிறுக்கனின் கையேடு

Image
மனம் உடைந்து சோர்வாக இருக்கும்  ஒரு தருணத்தில் உங்களுக்கு வாழ்வின் மீதான பிடிப்பும் நம்பிக்கையும் அற்று போகும் இல்லையா? பசிக்காது,  ஓர் சிறந்த நகைச்சுவை காட்சியை  பார்த்து சிரிக்க இயலாது போகும் தருணத்தை கட்டாயம் வாழ்வின் ஏதோவொரு சந்தர்ப்பத்தில்  கடந்து வந்திருப்பீர்கள்.  இதே போல அடிக்குமேல்  அடிவிழும் ஒரு மோசமான  நாளில் இதயம் பாரமாகி, மண்டை வெடித்துவிடும் நிலையிலிருக்கும் நேரத்தில் அதிகமாக பசிக்கும். சாதாரண நகைச்சுவைக்கும் கிளர்ந்தெழுந்து சிரிப்பீர்கள். எதையோ கடந்து வரவும், மறந்து விடவும் தீவிரமாக முயற்சிப்பீர்கள். பாவம்! அதை உங்களிடம்  இருந்தே மறைத்து கொள்வீர்கள். அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்தும், முடியும் என்பதாக நம்புவீர்கள்.     ஜோக்கர் படத்தின் நாயகன் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகும்  போது வெடித்து கதறி அழுவதற்கு  பதிலாக உரக்ககத்தி சிரிக்க ஆரம்பித்து விடுவான். அது அவனை மீறி நிகழும் ஒன்று. ஒரு வேளை கண்ணீராக வெளிப்பட்டிருந்தால் அவன் மனப்பாரம் குறைந்து சரி போயிருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையும் புறக்கணிப்புக்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளாகும்  போதும் விழுந்து புரண்டு சிரிக்

கரமாஸவ் சகோதர்கள்

Image
ஆசிரியர்: தஸ்தயேவ்ஸ்க்கி தமிழ் மொழியாக்கம் :  அரும்பு சுப்பிரமணியன்  No Spoilers   பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட உலக பிரசித்தி பெற்ற கிளாசிக் நாவலான "கரமாஸவ் சகோதர்கள்"  , 1879 - 1880 வரையில் The Russian Messenger என்ற ரஷ்ய வாரப்பத்திரிகையில் தொடராக வெளிவந்து கடைசியில் புத்தகமாக பதிப்பிக்கபட்டது. இதை எழுதி முடிக்க இரண்டு வருட காலத்தை எடுத்துக்கொண்டுள்ளார்.  "கரமாஸவ் சகோதர்கள்"  நூலாக வெளிவந்து நான்கு மாதங்களின்  பின்னர் தஸ்தயேவ்ஸ்க்கி  நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.  அவரின் கடைசி நாவலும் இதுவே. கதைச்சுருக்கம் சிறுவயதில் தாயை இழக்கும்  நான்கு சகோதர்கள், (ஸ்மெர்தியாக்கவ்வையும் சேர்த்து)     பொறுப்பற்ற குடிகார, கேளிக்கைகளில் நாட்டமுள்ள  பெண் பித்தரான தந்தையின் எவ்வித கவனிப்பும், பரிவும், வழிநடத்தலும் இன்றி கைவிடபடுகிறார்கள். பின்னர் அவர்களில் மூவர்  தாய்வழி உறவினர்களால் வளர்க்கபடுகிறார்கள்.  முறைசாரா உறவின் மூலம்  பிறந்த ஒருவன் மட்டும் (ஸ்மெர்தியாக்கவ்) தந்தையுடன் வீட்டு வேலைக்காரனாக வளர்கின்றான்.  வருடங்கள் உருண்டோடுகிறது. மற்றைய மூவரும் வளர்ந்து ப