Posts

Showing posts from July 13, 2019

Arctic (2019)

Image
No Spoilers அது என்னமோ தெரியல சர்வைவல் படங்களின் மீது எனக்கு தீராக்காதல் ! கிட்டதட்ட Imdb ல நல்ல ரேட்டிங் உள்ள சர்வைவல் படம் எல்லாத்தையும் பார்த்துட்டேன். இப்போ புதுசா ஒன்னு வந்தாலும் விடுறது இல்லை. ஒரு 4 வருசத்துக்கு முன்னாடி ரேட்டிங் பார்த்து படம் பாக்குற பழக்கம் எல்லாம் கிடையாது. இல்லை அப்பிடி ஒன்னு இருக்கதே தெரியாதுனு சொல்லலாம். அந்த நேரத்துல நல்ல உலக சினிமா ரசனையுள்ள ஒரு மலையாளி நண்பன் இருந்தான். (பின் நாட்களில் அவன் மூலமாகதான் Imdb அறிமுகம் கிடைச்சுது) அவன்கிட்ட நல்ல சர்வைவல் படமா சொல்லுடானு கேட்டேன் "அடர்ந்த காட்டுல மாட்டிகிட்டு சாப்பாடு, தண்ணி இல்லாம இயற்கையோட போராடி தப்பி பிழைச்சு வார மாதிரி இருக்கனும்னு விவரணையா சொன்னேன்" சிரிச்சுகிட்டே  "அந்த அளவுக்கு ஒருத்தன் கஷ்டப்படுறத பார்க்கும் அளவுக்கு உனக்கு ஏன்டா இப்படி ஒரு கொலவெறினு விளையாட்ட கேட்டான் !" ஒரு நிமிஷம் இந்த மாதிரி படம் பாக்குறதுக்கு இப்பிடியும் ஒரு காரணம் இருக்குமானு யோசிச்சு பார்த்தேன். எனக்கு அப்பிடி தோணல, மாறாக எனக்கு தன்னம்பிக்கையை தந்துச்சி. கடைசி மூச்சு வரை போராடனும்,

Badla (2019)

Image
No Spoilers இந்த படத்தை பார்க்க Pink படம் தான் காரணம். அதுல அமிதாப் பச்சனும், டாப்ஸியும் செம்மயா பண்ணிருப்பாங்க. இதுலயும் அதே ஜோடி நிச்சயமா நல்லா இருக்குன்னு நம்பினேன் வீண் போகல. இன்னொரு ஒற்றுமை வேற ரெண்டு படத்துலையும் அமிதாப் வக்கீல், டாப்ஸி அவரோட கிளைன்ட். ஆனால் Pink படம் கோட் ட்ராமா வகை. Badla திரில்லர், மிஸ்ட்ரி வகை. Who is the killer !?  இது தான் படத்தின் ஒரு வரி கதை. ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்துல பார்வையாளனை ஊகிக்க விடாம அவனை எந்த அளவுக்கு குழப்பமுடியுமோ அது வரை குழப்பி, படத்தின் கடைசி கட்டம் வரைக்கும் ஒரு முடிவுக்கு வரவிடாம குழப்பத்தில் வைத்து இருப்பதில் தான் இயக்குனரின் திறமை இருக்கு அதை Sujoy Ghosh சிறப்பாக பண்ணிருக்காரு. திரில்லர் விரும்பிகளுக்கு இதை விட பெரிய விருந்து என்ன இருந்திட போகுது! நெய்னா (Taapsee) கல்யாணமான இளம்பெண் தொழிலதிபர். ஒரு நாள் (கள்ள)காதலனுடன் ஓட்டல் அறையில் தனியா இருக்கும் போது திட்டம்மிட்டு கொலைவழக்குல மாட்டிவிடப்படுறா, எப்படின்னா ? அறை உள்பக்கமா பூட்டி இருக்கு. அவளையும் காதலனை தவிர வேறுயாரும் உள்நுழைய வாய்ப்பில்லை. அறையில் யாரோ

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Image
No Spoilers எதிர்பாரா சந்திப்பு - ஊடல் - கூடல் - ஊடல் - கூடல் - பிரிவு - கூடல் = ? காதலை மட்டும் எத்தனை தடவை படமா எடுத்தாலும் புதுசா பார்க்குற மாதிரியே இருக்கும்,சலிப்பே தட்டாது. மனுசனா   பிறந்து காதலிக்காம சாகுறது எல்லாம் பேரும் கொடுமை. அந்த சுகத்தை ஒரு முறையேனும் வாழ்க்கையில் அனுபவிச்சிடனும். சண்டை, பொறாமை, கோபம், தவிப்பு, காத்திருப்பு, பரிதவிப்பு, வெறுப்பு, பிரிவு, ஏக்கம், இப்படி எதுவுமே இல்லாம ஓரு காதல் இருக்க முடியாது. அப்பிடி இருந்தா அது காதலே இல்லை. இதை படிக்கற யாராச்சும் No எங்க love matured ரொம்ப smooth தா போய்ட்டு இருக்குனு சொன்னா தயவு செஞ்சு நீங்க பண்ணுறது காதலானு சரி பார்த்துக்கிருங்க ! ஊடலும், கூடலும் இல்லாத காதல் சுகப்படாது. ஒரு நல்ல காதல் படத்திற்கான எல்லா அம்சங்களும் கூடிவந்து கைநழுவிப்போகிறது ! கௌதம், தரா இந்த ரெண்டு கதாபாத்திரம் தான் படத்தினை கடைசிவரை தாங்கி பிடிக்கும் தூண்கள். ரொம்ப கச்சிதமா, நேர்த்தியா உருவாங்கப்பட்டிருக்கு. ஹரிஷ்கல்யாண சொக்லெட் பையனா பார்த்துட்டு இதுல முரட்டு காதலனா பார்க்கும் போது ஆரம்பத்துல இது இவருக்கு சரியாகுமானு தோணுச்ச

Photograph (2019)

Image
No Spoilers இந்த படத்தை பார்க்கும் பொழுது  ஏக்கத்துடன் கவிதை படிக்கும் உணர்வு. அதில் சோகமுமில்லை, இன்பமுமில்லை. வாழ்வை அதன் போக்கில் ஏற்றுக்கொண்ட ஒரு சாமானிய விளிம்பு நிலை மனிதனை பார்க்கலாம். தன் நிலை குறித்து யாரையும் குறை சொல்லவில்லை, பெரிதாக வருத்தப்பட்டவனாகும் தெரியவில்லை. பொருளாதார சுமைக்கு மத்தியில் திருமண வாழ்க்கை வாழும் ஆசை இருந்தாலும் இதுவும் சேர்ந்து வாழ்கை மேலும் சிக்கலாகி போய்விடக்கூடாது என்ற பயம் அவனை சூழ்ந்து இருந்தது. பணப்பிரச்சனையும் அது சார்ந்த பொறுப்புகளையும் முடித்து விட்டு பிறகு பார்த்து கொள்ளலாம் என வாழும் நாயகன் !  வசதிவாய்ப்பு இருந்தும் எதிலும் பிடிப்பு அற்று படிப்பு, வீடு, தூக்கம் இதுவே தினசரி வாழ்க்கை என வாழும் நாயகி, சக வயது யுவதிகளிடம் இருக்கும் விடலை பருவத்திற்கே உண்டான குறும்போ, குதூகலமோ எதுவுமில்லை. முற்றும் துறந்த முனியின் சாந்தம் படர்ந்த முகம் அவளுக்கு ! 50, 30 ரூபாய்க்கு புகைப்படம் எடுப்பதை வாழ்வாதாரமாக கொண்ட தெரு புகைப்படக்கலைஞன். அந்த தெருவில் தான் அவளை, அவன் காண்கிறான். "மேடம் ஒரு போட்டோ எடுத்துகிருங்க" இது தான் அவர்களின

Bicycle Thieves (1948)

Image
No Spoilers போருக்கு பின்னரான காலப்பகுதியில் இத்தாலி வறுமையின் கோரப்பிடியில் சிக்குண்ட காலக்கட்டம்தான் கதை நிகழும் களம். இக்காலப்பகுதியில் மேட்டுக்குடிகளிலும் பார்க்க அதிக அளவில் இன்னல்களுக்கு முகம்கொடுத்தவர்கள் சாமானியர்களே. இன்றாவது எதும் வேலைக்கிடைக்காதா!? என்ற ஏக்கத்தில் தினந்தோறும் ஒரு கட்டிடத்தின் முன்னால் குறிப்பிட்ட அதிகாரிக்காக காத்திருக்கும் ரோம் நகரவாசிகள். அவர் வந்து தன் கையிலிருக்கும் பட்டியலில் இருந்து சில பெயர்களை வாசிக்கின்றார். அனைவரின் முகத்திலும் எதிர்பார்ப்பு தங்களின் பெயரும் வரக்கூடும் என்ற நப்பாசைத்தான். அதில் கதையின் நாயகனான என்டனியோவின் பெயரும் கூப்பிடப்படுகிறது. அவனே அதை எதிர்பார்க்கவில்லை, தெரு தெருவாக சென்று திரைப்பட போஸ்டர் ஒட்டும் வேலை. சாப்பாட்டுக்கே ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில் "என்னடா பண்ணப்போறமுணு யோசிச்சுட்டு" இருந்தவனுக்கு வேலைக்கிடைத்த செய்தி காதுல தேன் ஊற்றிய மாதிரி இதமாக இருந்தது ! அதே நேரம் கூட்டத்தில் இருந்தவர்கள் தங்களுக்கும் எதாவது பணித்தரும்படி கூச்சலிட்டு கொண்டு இருந்தனர். அவர்களை தகுந்த காரணங்கள் சொல்லி சமாளித

BIGG BOSS பார்க்கலாமா வேண்டாமா?

Image
பிக்பாஸ் சீசன் மூணு ஆரம்பிச்சிடுச்சு, எங்க பார்த்தாலும் அது சார்ந்த பேச்சுக்கள்தான். சமூக வலைத்தளங்களில் ரெண்டு குரூப் வெறியோட சுத்திட்டு இருக்கானுங்க! ஒன்னு ஆதரவா ரொம்ப எதிர்பார்ப்பில்  இந்த முறை என்னவெல்லாம் நடக்க போகுதுனு. மத்தவனுக கழுவி ஊத்திட்டு திரியுறானுக என்னமோ பிக்பாஸ் பாக்குறவன் எல்லாம் ஐ.எஸ் தீவிரவாதிக மாதிரியும்! இவங்க எல்லாம் ஜென்மததுறவிகள் மாதிரியும்.  எதுக்கு இவ்வளவு கொலவெறினு கேட்டா? அடுத்தவன் வீட்டுல என்ன நடக்குதுன்னு எட்டிப்ப ாக்குற பழக்கம் வயுரிசம்,(voyeurism) அங்க அவுத்து போட்டுட்டு ஆடுவாலுங்க, சண்டை போடுவாய்ங்க இதை பார்த்தா குடும்பம் கெட்டு போயிடும், புள்ள குட்டிங்க விளங்காம போயிடும், உன் பரம்பரையே நாசமா போயிடும்! ஆனால் இவனுக விமர்சிக்கற அளவுக்கு ஒன்னும் மோசம் கிடையாது. பக்கத்து வீட்டுல என்ன பேசுறாங்கனு கேக்குறது தப்பில்ல, அவன் வீட்டுல பிரச்சனை நடக்க நீ காரணமா இருந்து விட கூடாது. அங்க என்ன நடக்குதுன்னு தெரிச்சா தானே ஒரு  நல்லது கேட்டதுக்கு போய்ட்டு நிற்க முடியும். நமக்கு பல விஷயத்தை கற்று குடுக்குறதே நாம் வாழும் சமூகம் தானே? உதாரணத்துக்கு பக்க

பச்சைதமிழனின் மனக்குமுறல்

Image
தமிழன்டானு சொல்லும் போதே எவ்வளவு பெருமையாயிருக்கு உலகத்திலேயே தமிழ் மொழிதான் தொன்மையானது. ஆயிரக்கணக்கான மொழிகள் இருக்கும் உலகத்துல சாதாரண விஷயமல்ல. தமிழ் என்பது வேறும் உணர்வு சார்ந்த விடயம் மட்டுமில்லை. அது நம் அடையாளம், கலாச்சாரம், வாழ்வுமுறை. பள்ளி வாழ்கை முடிந்து ஏதாச்சும் ஒரு வேலைக்கு போன பிறகு தமிழ்ல எழுத, புத்தகங்களை படிக்க அல்லது இலக்கிய உரையாடல்களில் பங்குபெற கூடிய சந்தர்ப்பம் நாம் வாழும் சூழலில் எந்த அளவுக்கு இருக்கு? முதல்ல நமக்கு  ஆர்வம் இருக்கா? (புத்தக) வாசிப்பு  பழக்கம் பாதிப்பேருக்கு சுத்தமா  கிடையாது!  வாழ்க்கையில நாம எல்லாம் ரெண்டு விஷயத்துக்கு நேரம் ஒதுக்குவோம். ஒன்னு பணம் தரக்கூடிய வழிமுறைகள். மற்றையது பொழுதுபோக்கு அம்சங்கள்.  ஆனால் வாசிப்புக்கு நேரம் ஒதுக்குவது இல்லை.  பள்ளி படிப்பு பணம் எப்படி சம்பாத்திக்குறதுனு மட்டும் கத்துகொடுக்கும், வாசிப்பு பழக்கம் எப்படி வாழனும் என்ற ஞானத்தை கொடுக்கும். எல்லாருக்கும் வீட்டுல, நாட்டுல, வேலை செய்யும் இடத்துலன்னு எதாச்சும்  பிரச்சனை இருந்துகிட்டேயிருக்கும். வெளியே சொல்லமுடியாதவற்றை மனசுக்குள்ள பூட்டி வை