Posts

Showing posts from March 22, 2020

நோய்கிருமிகளுக்கு எதிரான யுத்தம்

Image
நாடுகள் எல்லைகளை மூடுவதும், நகரங்களை முடக்குவதும். சமூகங்கள், தனிநபர்கள் குவாரண்டைன் நிலைக்கு உட்படுத்தபடுவதும். கொரோனா போன்ற கொள்ளை நோய்கள் பரவலை தடுப்பதற்கு குறுகிய காலத்தில் பயனளிக்கலாம் ஆனால் நீண்ட நாட்களுக்கு இதை தொடர்ந்தால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையா பாதிக்கப்படும். உலகமயமாக்களின் பின்பு ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டின் பொருளாதாரதோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ பிணைக்கபட்டுள்ளது. உலக நாடுகளை விடுங்கள் நாம் வாழும் நகரங்களையும், கிராமங்களிலும் இன்றைய நிலைமையை கவனித்து பாருங்கள். முதற்கட்டமாக தினக்கூலிகள் மோசமாக பாதிக்கப்படுவார்கள். ஒரு வேலை சாப்பாட்டிற்கே பேரும் திண்டாட்டமாய் போகும். மிடில் கிளாஸ் மக்களிடத்தில் பணமிருந்தாலும் பொருட்களும், சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் அங்கும்  சிக்கலான நிலைமைதான். செல்வந்தர்கள் சில மாதங்கள் தாக்கு பிடிப்பார்கள். பிறகு அவர்களின் பாடும் திண்டாட்டம்தான்.  வரலாற்றில் உலகமயமாக்கலுக்கு முன்பு, 14ம் நூற்றாண்டில் கொள்ளை நோயான பிளாக் டெத் (Black death) மூலம், ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலக்கட்டத்தில் மேற்கு ஐரோப்பாவிலும், கிழக்கு ஆசிய

கை குலுக்கும் பழக்கத்தின் வரலாறு

Image
கொரோனாவின் தீவிர பரம்பலை தொடர்ந்து பல உலக நாடுகள் கை குலுக்குவதை தவிர்த்து கொள்ளும்படி மக்களை அறிவுறுத்தியுள்ளன, சீன அரசாங்கம் கை குலுக்குவதை தவிர்க்கும் சமிஞ்சகைகள் அடங்கிய பதாதைகளை நாடு முழுவதும் காட்சிப்படுத்தியுள்ளது. நகரங்களில் கடமையில் ஈடுபடுத்தபட்டுள்ள ஆர்ட்டிபிஸல் இன்டலிஜெண்ட் ட்ரோன்களும் வானத்தில் வட்டமிட்டபடி கை குலுக்குவதை தவிர்க்கும் படி  குரல்வழி ஏச்சரிக்கை செய்கிறது.  95% கை குலுக்குவதன் மூலம் வைரஸ் பரவல் சாத்தியமாகிறது என்பதே  இதற்கு காரணம்.  கை குலுக்குவதற்கு பதிலாக தமிழரின் கை கூப்பி கும்பிடும் முறையை சொல்லி சிலர்  பெருமைபட்டுக்கொள்ள, ஒரு சாரார்  முன்னோர்களின் தீண்டாமையின் ஒரு அங்கம் தான் அது வேறு எந்த  காரணமும் இல்லை. எல்லாம் சாதிவெறி பிடிச்ச பயலுங்கனு திட்டிக்கொண்டு திரிகிறார்கள்.  இது எந்த அளவுக்கு உண்மையென்று தெரியவில்லை. ஆனால் கை கூப்பி வணங்கும் முறை தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, ஆசிய நாடுகளில் பலவற்றில் பழக்கத்தில் உள்ளது.  இதெல்லாம் ஒரு பக்கமிருக்க கை குலுக்கும் பழக்கத்தின் வரலாற்றை தேடிப்பார்த்தேன், சுவாரசியமாக இருக்கு.  இப்

T-வைரஸ் vs கோவிட்-19

Image
Resident evil என்றொரு பிரபலமான அறிவியல் பாண்டஸி வகையை சார்ந்த ஹாலிவுட் திரைப்படதை பார்த்து உள்ளீர்களா ? அதில் அம்ரெல்லா கார்பொரேஷன் என்னும் நிறுவனம் T-வைரஸ் என்னும் படுஆபத்தான  உயிரியல் ஆயுதத்தை இரகசியமாக உருவாக்கும். ஒரு விபத்தில் அந்த வைரஸ் அடங்கிய பரிசோதனை குழாய் கீழே விழுந்து வெடித்து சிதற T-வைரஸ் பரவஆரம்பித்து ஒரு கட்டத்தில் கட்டுப்பாடின்றி அந்த நிறுவனம் அமைந்திருந்த ரக்கூன் நகரம் முழுவதும் பரவதொடங்கிவிடும். T-வைரஸால் பாதிக்கபட்ட மனிதர்கள், விலங்குகள் என எல்லோரும்  ஸோம்பியாக உருமாறி மனிதர்களை கடித்து இரத்ததை உறிஞ்சு குடிக்க ஆரம்பித்து விடுவார்கள். கடிப்படும் அனைவருக்கும் அந்த வைரஸ் தொற்றிக்கொள்ளும் பிறகு அவர்களும் ஸோம்பிதான். அம்ரெல்லா நிறுவனம் தங்கள் தவறு உலகத்துக்கு தெரியக் கூடாதென்று  அந்த நகரத்தை தனிமைப்படுத்தி கூண்டோடு எல்லோரையும் அழித்து விடமுயற்சிப்பார்கள். இப்படி கதை பாகம் ஆறு வரைக்கும் நீண்டு போகும். நல்ல சுவாரசியமான திரைப்படதொடர். கிட்டத்தட்ட அதற்கு ஒப்பான சம்பவங்கள் தான் இப்பொழுது உலகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. என்ன ஒரு குறை? ஸோம்பியா யாரும் மாறவி

கொரோனாவிற்கு எப்பொழுதுமருந்து கண்டுப்பிடிக்கபடும் ?

வைரஸை மருந்தின் மூலம் அழிக்க முடியாது என்கிறார்கள் அப்படியென்றால்  கொரோனாவிற்கு காரணமான கோவிட்-19 (COVID-19) வைரஸை எந்த மருந்தை கொண்டு குணப்படுத்தமுடியும்? என்ற ஐயம் உங்களுக்கும் தோன்றியிருக்கலாம். பொதுவாக வைரஸ் தனது மூலக்கூற்று கட்டமைப்பை மாற்றி அமைந்துக் கொள்ளக்கூடியது. உதாரணமாக வைரஸ் ஒன்றை நாம் அடையாளம் கண்டு அதனை அழிக்க ஒரு மருந்தை (என்டிபயொட்டிக்கை)  உட்கொள்ளும் போது முதலில் அது தாக்கப்பட்டாலும் பிறகு அம்மருந்தினை  அடையலாம் கண்டு தன்வடிவத்தை மாற்றி அமைத்து கொள்ளும். அடுத்த முறை நாம் அதே மருந்தை எடுத்து கொள்ளும் போது அதனால் குறிப்பிட்ட வைரஸை இனங்கண்டு அழிக்க முடியாமல் போய்விடும்.  ஆனால் நம் உடலில் இயற்கையாக அமைத்துள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான நிர்பீடன தொகுதிக்கு வைரஸ் உட்பட உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை இனங்கண்டு அழிக்கும் வல்லமையுண்டு. ஒரு தடவை தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அடையலாம் கண்டுக் கொண்டால் அந்த தகவலை பதிவு செய்து வைத்து கொண்டு அவை மீண்டும்  நம் உடலில் புகும் சந்தர்ப்பங்களில் இரத்தத்தில் உள்ள வெண்குருதி சிறு துணிக்கைகளை ஏவி அழித்தொழித்துவிடும்

'சிங்க' பெண்கள்

மகளிர் தினத்திற்கு ஒருவாரம் முன்பும், பிறகு முடிந்து சிலநாட்கள் கழித்தும்  'சிங்க' பெண்கள் பேரும் வெறியுடன் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.   வழியில் சிக்குபவர்களுக்கு எல்லாம் செமத்தியான அடி, புரட்டி எடுத்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பதிவுகளில் பொத்தம்பொதுவாக எல்லா ஆண்களையும் வில்லன்களாக்கி போட்டுத் தாக்கி கொண்டிருக்கிறார்கள்.  அநேகமாக அவர்கள் படித்த சமீபத்திய அதிதீவிர பெண்ணியவாதிகளின் நூல்களும், சிந்தனைகளும் தான் இதற்கு காரணம். கற்றறிதல் நல்ல விஷயம்தான். ஆனால் அதை அப்படியே தங்களை சுற்றியுள்ள உண்மையாகவே பெண்களின் மீது அன்பும், அக்கறையும்,  நம்பிக்கையும், கொண்ட உறவுகளான அப்பா, அண்ணா, நண்பன், காதலன் மீது திடீர் என்று பிரயோகிக்கும் போது  " இந்த புள்ளைக்கு என்னாச்சு!, எதுக்கு எரிச்சு விழுறா!? "  வென்று, ஒரு மண்ணும் புரியாது தடுமாறி போகிறார்கள். இதில் மோசமாக தாக்கபடுவது நிஜமாகவே பெண்களை மதித்து அன்பு செய்யும்  ஆண்கள்தான். பாவம் வெறித்தனமான  தாக்குதல்!.  இப்பொழுதுதெல்லாம் பெண்கள் தினவாழ்த்து சொல்லவே பயமாக உள்ளது. 

ஒரு காலை பொழுதில்

Image
பதமாக பக்குவபடுத்திய நான்கு  ஏலக்காய்யை நன்றாக இடித்து துலாக்கி அடுப்பில் அரை கப்பிற்கும் குறைவான கொதிக்கும் நீரிலிட்டு பிறகு உயர்ரக தேயிலையில் ஒரு கரண்டியும் சேர்த்து நன்றாக சாயம் வரும்மட்டும்  கொதிக்கவிட்டு பின்பு சில நிமிடங்களில் ஒரு கப் பசும் பாலை சேர்த்து  சற்று நேரத்தில் சீனியும் ஒரு கரண்டி சேர்த்து. பால் பொங்கிவரும் தருணத்தில் அடுப்பின் நெருப்பின் அளவை குறைத்து மிதமான வெப்பத்தில் மீண்டும் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு சாயமும் பாலும் சேர்ந்து மண்ணிறம் பொன்னிறமாக மாறும் கணத்தில் இறக்கியேடுத்து, நாக்கில் மேன்சூடுபட பருகினால் ஆஹா ஹா ! அந்த சுவையை எப்படி வார்த்தைகள் கொண்டு வர்ணிப்பேன். அமிர்தம் தோற்றுவிடும். நல்ல கலவியில் உச்சத்திலிருக்கும் பேரின்பத்திற்கு சமம்.

புறக்கணிப்பும் அவமானமும்

Image
சுருதி யூ டியூப் இலக்கிய சேனலில் 'யாவரும் பதிப்பகத்தின்' நூல் வெளியீட்டு விழாவில்  "புதிதாக எழுத வருபவர்கள் கவனத்திற்கு" என்ற தலைப்பில்  கவரப்பட்டு எஸ். ரா  நிகழ்த்திய உரையை கேட்டுக்கொண்டிருந்தேன். அதில் அவர் குறிப்பிட்ட சில விடயங்கள் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.  அவர் எழுதுவதற்கு வந்த புதிதில் கையெழுத்து புத்தக பிரதியை எடுத்து கொண்டு ஒவ்வொரு அச்சகமாக ஏறி இறங்குவாராம். ஒரு தடவை பெரிய பதிப்பக எழுத்தாளர் ஒருவர் " ஆ.. வுன்னா ஊர்ல இருந்து கிளம்பி எழுத்தாளனாக போறேன், இல்லனா சினிமால சாதிக்க போறேன்னு இங்க வந்து நம்ம உயிரை வாங்க  வேண்டியது, ஊர்ல உங்களுக்கு எல்லாம் வேற வேலைவெட்டியே  கிடையாதா ? " என்று திட்டினாராம். அதற்கு எஸ். ரா " நீ முதல் வந்தே, நான்  உனக்கு பிறகு வந்தேன். அவ்வளவு தான் வித்தியாசம். " என்று பதிலுக்கு திட்டிவிட்டு திரும்பி வந்துவிட்டாராம். தான் இளம் வயதில் சரியான கோபக்காரறாம். எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதே எஸ். ரா தனக்கு முன்பு கோபம் வரும்மென்று  சொன்னதுதான். எப்பொழுது பார்த்தாலும் ஜென் துறவி போல சாந்தமாகவே இருப்பார். அவ

கரைந்த கைரேகை

ஆபீஸ்ல் அரேபிய நண்பனின் கம்ப்யூட்டரில் எதோ சின்ன பிரச்சனை ஜன்னல் திறக்கவில்லை அதுதான் 'விண்டோஸ் ஓபன்' ஆகல, நெடுநேரம் தடுமாறிக்கொண்டிருந்தான்.பிறகு என்னை கொஞ்சம் என்னவென்று பார்க்க சொன்னான். நான் பார்த்து சரி செய்து கொடுத்தேன். பயல் குதூகலமாகி   "சுக்ரான் ஹபீபி" சொல்லிவிட்டு ('நன்றி நண்பானு' தமிழில் அர்த்தப்படும்) "உனக்கு ஒன்னு தெரியுமா? சவூதி அரேபியால ஒருத்தர் உதவி பண்ணுனா, உன் கல்யாணத்துல உனக்கு நான் திருப்பி பண்ணிடுவேன்னு சொல்லுவோம், இது எங்களின் மரபு, நீ பண்ணுன உதவிக்கு, உன் கல்யாணத்துல நான் திருப்பி பண்ணுறேன்னு " சிரித்தபடி சொன்னான். நான் "கல்யாணத்துல உதவி பண்ணவேணாம், முதல் கல்யாணம் நடக்க எதாச்சும் உதவி பண்ணு  அப்படி ஒரு சம்பவம் நடக்குமானே சந்தேகமா இருக்குடானு "என் சோகபுராணத்தை பாட ஆரம்பிக்க   அவன்  " நானே எங்க அப்பன்கிட்ட கல்யாணம் பண்ணிவைக்க சொல்லி கெஞ்சிட்டு இருக்கேன் நீ வேறனு " புலம்பினான். உலகம் பூராவும் நைன்டி கிட்ஸ்சின் நிலைமை பரிதாபமாகி கிடக்குதேயேன்ற சமூக அக்கறையில்  நான் மேலும் துருவி கேட்கஆரம்பித்தேன்.