ஒரு காலை பொழுதில்
பதமாக பக்குவபடுத்திய நான்கு ஏலக்காய்யை நன்றாக இடித்து துலாக்கி அடுப்பில் அரை கப்பிற்கும் குறைவான கொதிக்கும் நீரிலிட்டு பிறகு உயர்ரக தேயிலையில் ஒரு கரண்டியும் சேர்த்து நன்றாக சாயம் வரும்மட்டும்
கொதிக்கவிட்டு பின்பு சில நிமிடங்களில் ஒரு கப் பசும் பாலை சேர்த்து
சற்று நேரத்தில் சீனியும் ஒரு கரண்டி சேர்த்து. பால் பொங்கிவரும் தருணத்தில் அடுப்பின் நெருப்பின் அளவை குறைத்து மிதமான வெப்பத்தில் மீண்டும் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு சாயமும் பாலும் சேர்ந்து மண்ணிறம் பொன்னிறமாக மாறும் கணத்தில் இறக்கியேடுத்து, நாக்கில் மேன்சூடுபட பருகினால் ஆஹா ஹா ! அந்த சுவையை எப்படி வார்த்தைகள் கொண்டு வர்ணிப்பேன். அமிர்தம் தோற்றுவிடும். நல்ல கலவியில் உச்சத்திலிருக்கும் பேரின்பத்திற்கு சமம்.
Comments
Post a Comment