Posts

Showing posts from July 12, 2019

ஆயிரம் காலத்து பயிர்

Image
சக வெளிநாட்டு நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி நீ மேரேஜ் பண்ணிட்டியா? நான் இல்லன்னு பதில் சொன்னதும். ஏன் உங்க நாட்டுகாரங்க பொதுவா லேட் ஏஜ்ல மேரேஜ் பண்ணுறீங்கனு? அடுத்த கேள்வி.  நேபாளம், இந்தியா போன்ற நாட்டவர்கள் முப்பது வயது வரை காத்திருப்பது இல்லை. பொதுவா நாம அப்போதான் திருமண வாழ்கைக்கு தயாராகுறோம். அந்த சமயத்தில் கூட பொருளாதார ரீதியாக இஸ்திரமான நிலையிருக்காது. திருமண வயதை தீர்மானிப்பதில் பணத்திற்கும் முக்கியப்பங்குண்டு.  மலைபோல் உயர்ந்து நிற்கும் வாழ்கை சிலவுகளுக்கு மத்தியில் சுமுகமாக திருமணத்தை நடத்தி முடிக்க பலவருட உழைப்பும், சரியான திட்டமிடலும் தேவை எடுத்தோம், கவுத்தோமுனு பண்ணுற காரியாமில்லை. இதை வெளிநாட்டு தோழர்களுக்கு புரியவைப்பது கடினம். கவுண்டமணி சொல்லுறமாதிரி "நானாடா மாட்டேன்றேனு" மனசுக்குள்ள சொல்லிக்கிட்டு அந்த இடத்தை விட்டு நகர்த்துருவேன். யோசிச்சு பாருங்க கொஞ்சம் சுமாரா திருமணத்தை நடத்த குறைந்தது பத்து லட்சம் ரூபா சரி வேணும். பணக்காரங்களுக்கு இது பிரச்சனையே இல்லை. வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கவங்க பெருசா அலட்டிக்கிறது கிடையாது கைல இருப்பத

செட்டில் ஆன மாப்பிள்ளை

Image
பசங்க பொதுவா பொண்ணுங்க மேல வைக்கும் குற்றச்சாட்டு ஒன்னு இருக்கு. பொண்ணுங்க மனச பார்த்து காதலிப்பாளுங்க, ஆனால் லைஃப்ல செட்டில் ஆனவன்னா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிருவாளுங்கனு. ஓரளவுக்கு உண்மைதான். காதலிக்கும் போது மனச பார்ப்பாங்க. இவன் தான்   வாழ்கைதுணைனு முடிவு பண்ணிட்டா வசதியா இருக்கானா,  நல்லா சம்பாதிக்கிறானானு? எல்லாம் பார்த்து தான் முடிவு பண்ணுவாங்க.   இதுக்கு பொண்ணுகளை தப்பு சொல்ல முடியாது. அவங்கே டிசைன்னே அப்படி. தன்னோட துணைய எந்த அடிப்படையில தேடனுமுனு அவங்க DNA யிலேயே ப்ரோக்ராம் பண்ணிருக்கு. அதை தாண்டி யோசிக்குறது இலகுவான காரியமில்லை. கிறுக்கு பய மாதிரி உளறுறேன்னு யோசிக்கிறீங்கலா? கீழ படிச்சிட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க. வைல்ட் லைப் (wildlife) ஆவணப்படங்கள் பார்த்தாலே போதும் கீதை படிச்ச மாதிரி உலக நியதியை பற்றிய புரிதல் வந்து வாழ்கையை எப்படி அணுகவேண்டும் என்ற ஞானம் கிடைச்சிடும். சரி விஷயத்துக்கு வாரேன். சம்பவம் 1 காட்டுல இருக்கும் ஒரு மான் கூட்டத்துல இரண்டு இளம் ஆண் மான்கள் ரெண்டு பயங்கரமா முட்டி, மோதி சண்டை போடுது. ரொம்ப ஆக்ரோஷமா! அந்த பக்கமா

Ishq / 2019

Image
No Spoilers Ishq / 2019 / மொழி: மலையாளம்  பீல் குட் மூவினு சொல்லுவம்மில்லையா  அது மாதிரி இது பீல் பேட் மூவினு சொல்லலாம்.  அதுக்குன்னு பார்க்க சகிக்காத மோசமான படமுன்னு அர்த்தப்படுத்திகிறாதிங்க,  வாய்ப்பு கிடைச்சா அடுத்தவன் அந்தரங்கத்துல புகுந்து விளையாடும் சேடிஸ்ட் கலாச்சார காவலர்களினால் நிகழும் சமூக அவலத்தை தோலுரித்து  காட்டி நம்மை குமுற செய்வதால் அப்படி சொன்னேன்.  முதல் பாதியில் எனக்கு பிரஷர் தலைக்கு ஏறி நாடி , நாளம் எல்லா வேடிச்சுடும்போல இருந்திச்சி!  கையாலாகாத ஹீரோ, அப்படிபட்ட ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கிய  இயக்குனர் மேல செம்ம கடுப்பாவும் இருந்துச்சு! மனசுல மோசமான கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டிக்கிட்டே இருந்தன். கையில கிடைக்கிறத தூக்கி அடிச்சு டிவிய உடைக்காமயிருந்தது  பெரிய விஷயம்! மெய் மறந்து போகும் அளவுக்கு சேட்டன் படத்தை  சிறப்பாக பண்ணிட்டாரு!  ஒரு கட்டத்துல படம் தானே பாக்குறம்  கூல், ச்சீல், ஓம் சாந்தி, சொல்லி மனதை சாந்தப்படுத்தி கொண்டேன்.  பாவம் இத்தனைக்கும் நாயகன்  சூழ்நிலை கைதி, ஒரு குத்தில் எதிரியை பறக்க வைக்க அவன் ஒன்னும் சூப்பர் ஹீரோ கிடையாதே!? பாக்குறத

விக்ரமாதித்தனின் பாஸ்வேர்ட்

Image
குறுங்கதை மீண்டும் மனம் தளராத விக்ரமாதித்தன் முருங்கை மரத்தின் மேல் ஏறி அங்கே தொங்கி கொண்டிருந்த வேதாளத்தை பிடித்து தொளில் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். சரியான தருணம் பார்த்து வேதாளம் வழமை போல ஒரு கதையை கூறி குழப்பிவிட்டு பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி கொண்டது. இதில் விக்ரமாதித்தன் தான் சொக்கன் அவனுடைய காதல்(கள்) தான் வேதாளம். பல முறை பல்ப் வாங்கியும் அவன் திருந்தியபாடு இல்லை. இம்முறை மிகுந்த நம்பிக்கையுடன் காணப்பட்டான். சரியாக முடிவு எடுத்து இருப்பதாகவும் எக்காரணம் கொண்டும் அவளை இழக்க போவது இல்லை என்று அடிக்கடி என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.  அவன் ரகசியங்களை என்னிடம் மறைப்பது இல்லை. என்மேல் மிகுந்த நம்பிக்கை உடையவன் அவனின் டயரி குறிப்புகளை கூட படித்து இருக்கின்றேன் அவனின் அனுமதியுடன். ஒரு வேலை நாங்கள் Gay யாக பிறந்து இருந்தால் லிவிங் டு கத்தேரில் இருந்திருப்போமெ என்னவோ? இருவருக்குமிடையில் அந்த அளவுக்கு அன்னியோன்யம். அவனின் டயரி குறிப்புகள் சுவாரசியமானவை அதை போலவே என்னிடம் பகிரும் விஷயங்களும்.  சொக்கன் கொஞ்ச காலமாக ஒருத்தியிடம் உறவில் இருந்தானாம

ஆசிர்வதிக்கப்பட்ட சோம்பேறிகள்

Image
இது ஒரு கடுப்பு கட்டுரை தான் சார்ந்த சமூக அமைப்பில்  ஒரு துளியும் அக்கறையின்றி வீட்டுக்கும் நாட்டுக்கும், இல்லை இந்த மண்ணுக்கே பாரமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவன்களுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம். இவர்கள் தனித்து இருந்தால் சரி விட்டுவிடலாம் குடும்ப அமைப்பில் புகுந்து கொண்டு ஜடமாக மருந்துக்கும் உபயோகம் இல்லாமல் இவர்கள் செய்யும் ஆஜராகம் இருக்கின்றதே அதுதான் பெரிய கொடுமை! வேலைக்கு போக மாட்டார்கள், மனைவி, பிள்ளைகளின் அடிப்படை தேவையை கூட பூர்த்தி செய்யமாட்டார்கள். ஆகாரம் கிடைத்தால் சாப்பிடுவார்கள், இல்லாவிட்டால் காற்றை குடித்து உயிர்வாழ இவர்களால் முடியும். வீண்பெருமை,  வெட்டி நியாயம் பேசுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களேதான் வரிக்கு வரி  "எடுப்பது பிச்சை ஏறுவது பல்லக்கு" என்ற தொனியில்தான் பேச்சுயிருக்கும்.  கடவுளுக்கு மிகவும் பிடித்த   குழந்தைகள் இவர்கள்,   அவரின் ஆசிர்வாதம் பரிபூரணமாகயிருக்கும்.  நீண்டஆயுளையும்,   தேகஆரோக்கியத்தையும்   உடையவர்கள்.   தன் வாழ்நாளில் பீர்ரை நுகர்ந்து   கூட பார்க்காத ஒருவனுக்கு  ஈரல் கர