ஆசிர்வதிக்கப்பட்ட சோம்பேறிகள்
இது ஒரு கடுப்பு கட்டுரை
தான் சார்ந்த சமூக அமைப்பில் ஒரு துளியும் அக்கறையின்றி வீட்டுக்கும் நாட்டுக்கும், இல்லை இந்த மண்ணுக்கே பாரமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜீவன்களுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம்.
இவர்கள் தனித்து இருந்தால் சரி விட்டுவிடலாம் குடும்ப அமைப்பில் புகுந்து கொண்டு ஜடமாக மருந்துக்கும் உபயோகம் இல்லாமல் இவர்கள் செய்யும் ஆஜராகம் இருக்கின்றதே அதுதான் பெரிய கொடுமை! வேலைக்கு போக மாட்டார்கள், மனைவி, பிள்ளைகளின் அடிப்படை தேவையை கூட பூர்த்தி செய்யமாட்டார்கள். ஆகாரம் கிடைத்தால் சாப்பிடுவார்கள், இல்லாவிட்டால் காற்றை குடித்து உயிர்வாழ இவர்களால் முடியும். வீண்பெருமை, வெட்டி நியாயம் பேசுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களேதான் வரிக்கு வரி
"எடுப்பது பிச்சை ஏறுவது பல்லக்கு"
என்ற தொனியில்தான் பேச்சுயிருக்கும்.
கடவுளுக்கு மிகவும் பிடித்த குழந்தைகள் இவர்கள், அவரின் ஆசிர்வாதம் பரிபூரணமாகயிருக்கும். நீண்டஆயுளையும், தேகஆரோக்கியத்தையும்
உடையவர்கள். தன் வாழ்நாளில் பீர்ரை நுகர்ந்து கூட பார்க்காத ஒருவனுக்கு ஈரல் கரைந்து, சிறுநீரகம் செயலிழந்து போயிருக்கும். ஆனால் தினமும் லிட்டர் கணக்கில் சாராயத்தை மண்டிவிட்டு மர்மஸ்தானங்கள் தெரிய போதுவெளிகளில் பிரண்டு கிடப்பதை மட்டுமே கடமையாக வைத்திருப்பார்கள். இவர்களை சிறுபிணி கூட தீண்டாது! நூறுவயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்து தன்னை சார்ந்தோரை வதைத்து கொண்டுயிருப்பார்கள்.
வெடிப்பதற்கு தயாராகயிருக்கும் தற்கொலை குண்டுதாரியின்
பக்கத்தில் இவர்கள் நின்றால் அந்த சக்திவாய்ந்த குண்டுகூட செயலிழந்து போய்விடுமளவுக்கு கடவுளின் கிருபை இவர்களுக்கு உண்டு.
நாசா விண்வெளி ஆராய்ச்சிக்கு இவர்களை பயன்படுத்தி கொள்ளலாம் இவர்களின் சிலரை பிடித்து செவ்வாய் கிரகத்தில் விட்டுவந்தால் மட்டும் போதும். உயிர்வாழ அத்தியாவசியமனா அடிப்படை காரணிகள் எதுவும்மின்றி வாழ்வதற்கு ஒரு வழியை கண்டுபிடித்து கொடுத்து விடுவார்கள். மொத்தத்தில் சாவு இவர்களை கண்டால் தலைதெறிக்க ஓடிவிடும். நிற்க வைத்து வண்டை, வண்டையாக திட்டினாலும் கண்டு கொள்ளமாட்டார்கள் வெக்கம், மானம், சூடு, சொரணை எதுவுமே இருக்காது.
எதை கொண்டும் இவர்களை அசைத்து விடமுடியாது. சோப்பு இல்லாமல் குளிக்கவும், டூத் பேஸ்ட் இல்லாமல் பல்லு துலக்கவும், கறி இல்லாமல் சோறு சாப்பிடவும், ஜட்டி இல்லாமல் பேண்ட் போடவும், இவர்களால் முடியும்.
நமக்கு மூன்னுறு வருடங்கள் சீனியர் ஆன கரப்பான்
பூச்சியை விட ஹய் லெவல் சர்வைவல் ஸ்கில்ஸ் உடைய ஜந்துகள் இவர்கள். கரப்பான் பூச்சியால் ரத்தத்தை உறையவைக்கும் அளவு கடும் குளிர்கொண்ட ஆர்டிக் கண்டத்திலும், சுட்டெரிக்கும் வெப்பநிலை கொண்ட பாலைவனத்திலும் மாதக்கணக்கில் உணவின்றி தற்காத்து உயிர் வாழமுடியும். சில சமயங்களில் இவர்களோடு கரப்பான் பூச்சியாலயே ஈடுகொடுக்க முடியாது.
எந்த விதமான நேர்/எதிர் மறையான சக்தியாலும் இவர்களை அசைத்து
பார்க்க முடியாது. இவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் தான்
சைக்கோவாக மாறி இவர்களை கொன்றுவிடும் வாய்ப்புகள் அதிகம்!
பின் குறிப்பு: ஒரு வேளை நீங்களே இதை வாசித்து கொண்டிருந்தால்? உயிரை மாய்த்து கொள்ளுங்கள் உங்களை சார்ந்தோருக்கு பேருதவியாகயிருக்கும்!
நரேஷ் 06
11-07-2019
Comments
Post a Comment