Posts

கனவு திரை (வாசிப்பனுபவம்)

Image
எழுத்தாளர் நரேஷ்  அவர்கள் கடந்த  நான்கு வருடங்களாக எழுதிய சினிமா விமர்சனத்தில் சிறந்த  30 படங்களின் புனைவு கட்டுரை தொகுப்பு தான் " கனவு திரை ". தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம், கொரியன், இன்னும் சில வேற்று மொழிப்படங்கள், வெப்சீரிஸ், மற்றும் ஆவணப்படங்கள் என எல்லாம்  சேர்ந்த கதம்பம் தான்  "கனவு திரை" எனக்கு பிடித்த படங்கள் என்று  யோசித்தால் இப்போதைக்கு நினைவில் வருவது, அவள் ஒரு தொடர்கதை,  பூவே பூச்சுடவா, கடலோர கவிதைகள், அழகன், 7ஜி ரெயின்போ காலனி திருடா திருடா  போன்ற படங்கள். இவற்றை பல முறை பார்த்த அனுபவம் உண்டு. இனியும் டிவியில் போட்டால் பார்ப்பேன். ஆனால் படங்களை தேர்ந்தெடுத்து பார்ப்பதை தவிர எனக்கு சினிமா பற்றிய ஆர்வம் பெரிய அளவில் இல்லை. தமிழ் சினிமா தவிர வேற்று மொழிப்படங்கள் எதையும் அதிகம் பார்த்த அனுபவம் இல்லை. அதிலும்  உலக சினிமா பற்றிய அறிவு எள்ளளவும் கிடையாது.  சினிமா பற்றிய விமர்சனம் என்று பார்த்தால் சன் டிவி சினிமா விமர்சனம், விகடன் விமர்சனம், அதையும் தாண்டி முகநூலில் கண்ணில்படும் விமர்சனம் இவை தான் எனக்கு தெரிந்தது. இந்த புத்தகம் இது போன்ற சினிமா

நவரசா (2021)

Image
ஒரு நாளைக்கு இரண்டு படங்கள் படி நவரசா எந்தோலோஜியை இன்று தான் பார்த்து முடித்தேன். எல்லோரும் வறுத்து எடுத்து விட்டார்கள். அதனால் நான் சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன். இந்த தொடரில் வசந்தின் "பாயாசம்" அற்புதம்!, யோகி பாபு நடித்த "Summer of 92"அபத்தத்தின் உச்சம்!, உருவக்கேலி நிரம்பிய, மூன்றாம் தர நகைச்சுவைக் காட்சிகள் குவிந்த நரகம். பீ, குசு, மூத்திரம் போன்றவற்றை திரையில் காட்டினால் நகைச்சுவை என்று நினைத்துக் கொண்டிருக்கும் பைத்தியக்காரக் கதையும், இயக்கமும். இந்த படத்தில் என்ன மயிரை இயக்குநர் சொல்லவருகிறார் என்று புரியவில்லை. ஒரு முதிர்கன்னியின் துயரத்தை கடைசியில் தன் "பீ" நகைச்சுவை மூலம் அசிங்கப்படுத்தி இருப்பார். நக்சலைட், ஈழம் கதையில் வருவது போல போராளிகள் பஞ்சு டயலாக் எல்லாம் பேசிக்கொண்டு இருக்க மாட்டார்கள். "ரௌத்திரம்" கதையில் விதவை தாய் சூழ்நிலைக் காரணமாக தன் சுயவிரும்பம் இல்லாமல் உடலுறவு கொள்கிறாள், அதனால் மகளினால் சாகும் மட்டும் வெறுக்கப்படுவதெல்லாம் சுத்த அபத்தம். சாகும் வரைக்கும் அவள் அப்படியே தியாகச் செம்மலாக இருந்து சாகவேண்ட

Kuruthi (2021)

Image
Kuruthi (2021) (மலையாளம்) நமக்கு மதப்பற்று, இனப்பற்று இருக்கலாம். அது இயல்பானது தான், அதுவே ஓவர் டோஸாகி வெறியாக மாறிவிடக்கூடாது. பின்பு நீங்கள் எதனை காப்பாற்றுவதற்கு புறப்பட்டிர்களோ அதற்கு இழுக்கை  தேடி வைத்து விடுவீர்கள். நீங்கள் சும்மா இருந்திருந்தாலே அது இவ்வளவு காலம் இருந்தது போல தன் பாதையில் அமைதியாக பயணித்து கொண்டிருக்கும். ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு உங்களை ஒன்றாக சேர்த்து வைத்திருக்கும் பெரும் நம்பிக்கைகள் எல்லாம் சோடிக்கப்பட்ட கற்பனை கதைகள். மனித இனமே இந்த கதைகளை சுற்றித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் பயணத்திற்கு இது போன்ற கதைகள் தேவைப்பட்டன. மனித குலத்தின் நிலைத்திருத்தலுக்கு அவனின் இந்த கற்பனைத் திறனே காரணம். பணத்தை பாருங்கள் அது வெறும் காகிதம் தான் அதற்கு ஆயிரம், நூறு, பத்து என்று பெறுமதி இருப்பதாக அரசாங்கம் சொல்வதால் நம்புகிறோம். அதே அரசாங்கம் நாளைக்கே இது பெறுமதி இழக்கிறது என்றால் அது மீண்டும் வெறும் காகிதம் ஆகிவிடும். ஒரு கதையை நம்பும் வரைக்கும் மட்டும் தான் அதன் மேல் புனையப்பட்ட நம்பிக்கைகள் எல்லாம் உயிர்த்திருக்கும்  மனிதனின் இன்னொரு அத

ஓவியன்

வான்கோ தன் காதலிக்கு காதை அறுத்து கொடுக்கவில்லையாம், நிர்கதியான நிலையை அறிந்திருந்தும் கடனைத் திருப்பிக் கேட்ட விலைமாதுக்கு தான்  அறுத்துக் கொடுத்தாராம். அவர் தன்னை சுட்டுத் தற்கொலை செய்து கொள்ளவில்லையாம், யாரோ ஒரு சிறுவனை காப்பாற்றத்தான் அப்படிப் பொய் சொன்னாறாம். அவர் சித்தம் கலங்கியவர் கிடையாதாம், மனிதர்களை  கண்டுப்பயந்து தான் ஒதுங்கி நின்றாராம். நேற்றுக் கனவில் வந்தவர், இப்படி நெடு நேரம் பேசிக்கொண்டிருந்தார். “ஓவியம் உலகை அடக்கும்  உலகம் ஓவியத்தை அடக்கும்  ஓவியன் தன்னை அடக்கி  உலகை ஓவியத்துக்குள் ஒடுக்குவான்." என்ற ஆத்மாநாம் கவிதையை படித்துக் காட்டினேன். சிறு புன்னகை செய்தார். பின்பு சுவற்றில் ஒடுக்கியிருந்த நீலவானில் மாயமானார். 08-03-2021

சிறு சிறு தருணம்

மழை நாளில், சன்னலில் உடலை குறுக்கியப்படி தூறலை ரசிக்கும் பூனைக் குட்டி. யாமத்தில் தழுவிக் கிடக்கும் வெற்றுடல்கள். நாவலின் கடைசி அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளன். முதல் குழந்தையை ஸ்பரிக்கும் ஆண். சிறுத் தொட்டியை கடலாக்கிய தங்க மீன். முலையின் மென்மை, குறியின் அழுத்தம், கண்டுணர்ந்த அவனும் அவளும். பிடித்த கதையின் கடைசி வரி, முற்று. முதல் காதல், உதட்டு முத்தம் அவள் வாசனை. மழலையின் இமைக்கா நொடிப் பார்வை, பின் தொடரும் குறுஞ்சிரிப்பு. ராஜாவின் இசை, உன் நினைவு, சிறு புன்னகை, வடியும் கண்ணீர் துளி. குறையொன்றும் இல்லை, நான் வாழ்ந்து விட்டேன். 08-01-2021

வடு

ஓர் இன்ப கவிதை புனைய வேண்டும். பொருத்தமான சொற்களை தேடிக்கொண்டிருந்தேன். உன் நினைவு அடுக்குகளால் நிரப்பப்பட்டிருக்கும்  அகப்பெருவெளியில் நான் எங்கனம் அவற்றை கண்டடைவேன். 07-28-2021

சுவடு

நித்தமும் உன் நினைவுகளை கடந்து தான் அவளுடன் காதலுறுகிறேன். போகத்தின் உச்சத்தில் திளைத்திருக்கும் சமயத்தில்  உன் பெயரைச் சொல்லி அவளை  விளித்திடுவேனோவென்று அஞ்சுகிறேன்!  நீ இடித்து நிர்மூலமாக்கிய குடிசையை அவள் கட்டிக்கொண்டிருக்கிறாள்.  விரைவில் அங்கு குடியேறிவிடுவோம். பிறகு உன் முகவரியை நான் நிரந்தரமாகத் தொலைத்து விடக்கூடும். 07-28-2021