Posts

Showing posts from April 30, 2021

மஜ்னூன் - சுகந்தியின் வாசிப்பனுவம்

Image
புத்தகம் : மஜ்னூன் (மின்னூல்) ஆசிரியர்: நரேஷ் மாட்டு பொங்கலுக்கு மொத்தமா வடை பாயாசம் பழம் விதவிதமான காய்கறிகள் சோறு குழம்பு பூசணிக்காய்  எல்லாத்தையும் பிசைந்து உருண்டையாக குடுப்பாங்க. ஒரு வாய்க்கு ஒரு மாதிரியான ருசியில் இருக்கும் . அது மாதிரி இருக்கு  இந்த புத்தகம் . விரக்தி 'அமானுஷ்யம்' சுற்று சூழல்' நகைச்சுவை,கோபம் ,இயலாமை, அறிவியல், தத்துவம் ,காதல் ,காமம், பழி ,கொலை, ஏலியன், மறுபிறவி ,வறுமை. ஏமாற்றம், வன்கொடுமை என அத்தனையும் கலந்து‌ கட்டியிருக்கார். அதிலும் ஒன்று, இரண்டு,மூன்று  வரிகள், மூன்று வார்த்தைகளில் வரும் கதைகள் எல்லாம் செம! புதிய எழுத்தாளரும்‌ பழைய எழுத்தாளரும் உரையாடல் சரியான காமெடி!      பிரசர்‌ குக்கர் கதையில்  கார்ப்பரேட் கம்பெனிகளில் முழி பிதுங்குபவர்களின் நிலையை சொல்லியிருப்பது  மன அழுத்தத்தின்‌ வெளிப்பாடு "மேனேஜரிடம் கடிப்பட்டவர்கள். மூத்திரம் முட்டுவதாகப் பாவனை செய்துக்கொண்டு அங்கு சென்று அதனிடம் முறையிட்டு, தன் பிம்பம் கரைவதைச் சில நிமிடங்கள் பார்த்து விட்டு, முகத்தைக் கழுவிக்கொண்டு புன்னகைத்தபடியே வெளிவருவார்கள். அந்த கணம் தங்கள் சுயம

மஜ்னூன் குறுங்கதைகள் - வாசிப்பனுபவம் - சே.தண்டபாணி

Image
மஜ்னூன் குறுங்கதைகள்   (கிண்டில் பதிப்பு) பக்கங்கள்-117 நம் குழுவில் இருக்கிற வாசிப்பு புலிகளில் ஒருவர் நரேஷ். இந்நூலின் லிங்க்கை வில்லு பட வடிவேலு கிணற்றில் வாளியைத் தொங்கவிடும்போது எட்டிப் பார்ப்பது போலப் பதிவிட்டார். அப்போதுதான் இவரை எனக்கு முதன்முதலாகத் தெரியும். படிக்கலாம் என்று குறித்துக் கொண்டேன். ஆனாலும் நிறைய புத்தகங்கள் அடுத்தடுத்த கிடாய் வெட்டுக்குத் தயாராக துளுக்கு போட்டு வைத்திருந்ததால் இந்நூலை ஓரமாக கிண்டிலில் கட்டி வைத்தேன். பிறகு இப்போட்டிக்குள் உலகமே அழிந்தாலும் வாசித்துவிட வேண்டும் என்ற சங்கல்பத்துடன் நேற்று வானம் கடமுடவென்று அறற்றியபோதும் வாசித்து முடித்துவிட்டேன். பதிவு எழுதுவதற்குள் மின்னல் பளீரென்றதால் எங்கேபோன் புகைந்துவிடுமோ என்று ஆப் செய்துவிட்டேன். பொறுமை காத்த வாழும் புத்தர் நரேஷ்க்கு நன்றி. கவிதை,சிறுகதைகள்,கட்டுரைகள்,நாவல் இதைத்தாண்டிய குறுங்கதைகள்தான் இத்தொகுப்பு. சில வரிகளிலேயே கதை எழுத வாய்பிருக்கு ராஜா என நரேஷ் நிரூபித்துள்ளார்.  இதில் வரும் பேய் பற்றிய கதை சற்றே பஷீரையும் போகன் சங்கரையும் அங்கிட்டு போய் வெளாடுங்கப்பா என்று சொல்கிறது. வலிகள

மஜ்னூன் - இந்துவின் வாசிப்பனுவம்

Image
தலைப்பு: மஜ்னூன்   ஆசிரியர்: நரேஷ்  நம் குழுவின் நண்பர் நரேஷின் முதல் குறுங்கதை தொகுப்பு. ப்ரியதர்ஷினியின் அறிமுகத்தால் நானும் வாசித்தேன். சலிப்பில்லாத வாசிப்பிற்கு உத்தரவாதம் தரும் அற்புதமான கதைகள் உள்ளன. தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த கதை என்றால் தயக்கம் என்கிற கதையை சொல்வேன். சம வயதுடைய பெண் மேலதிகாரியாக இருக்கும் போது அவளிடம் நீ அழகாய் இருக்கிறாய் என்கிற விஷயத்தை சுலபமாய் சொல்ல முடியாமல் மனதில் எழும் தயக்கத்தை அப்பட்டமாய் சொல்லி இருக்கும் விதம் அருமை. அங்கு  யாரும் புலப்பட வில்லை கதையில் யாரு பேயாக இருப்பார் என்பதை ஒருவாறு ஊகிக்க முடிகிறது. மஜனூன் என்கிற தலைப்பிற்குரிய கதையும் வெகு வித்யாசமான கதைக்களம் கொண்டது. நறுமுகை என்கிற கதையில் ஒரு பெண்ணின் எதிர்பார்ப்பு காதலாக இருப்பதும் ஒரு ஆணின் எதிர்பார்ப்பு எவ்வளவு காதலாக இருப்பினும் காமமே அங்கு போட்டியில் ஜெயிக்கிறது என்பதையும் கோடிட்டு காட்டியதாக எனக்கு தோன்றுகிறது. காதல் கதைகள் ஒன்றை தவிர பெரும்பாலும் சோகத்தையே வெளிப்படுத்த்துவது எனக்குள் சிறு ஏமாற்றத்தை கொடுத்தது. ஏழு நிமிடங்கள் மற்றும் மிகைல் எ ஐ என்கிற கதைகள் அறிவியல்

மஜ்னூன் குறுங்கதைகள் வாசிப்பனுபவம்

Image
தோழி பிரியதர்சினியின் வாசிப்பனுவம்  புத்தகம் :  மஜ்னூன் (கிண்டில் பதிப்பு) ஆசிரியர் : நரேஷ்  பக்கங்கள் : 117 நரேஷ்...., நம்ம "வாசிப்பை நேசிப்போம்" குழுல ஒரு தேர்ந்த வாசிப்பாளர். அவரோட தொடர் வாசிப்பும், மத்தவங்க விமர்சனங்களுக்கு குடுக்குற ஊக்கமும் எப்போதும் கவனிச்சதுண்டு. ஆனா இன்னைக்கு நானே கவனிச்சேன், அவர் ஒரு குறுங்கதை தொகுப்பு எழுதிருக்காரு. அதை எங்கையுமே என்னை வாசிக்க சொல்லி சொல்லல. நானே கவனிச்சு வாசிக்க ஆசைப்பட்டேன். முதல் புத்தகம்ன்னு சொல்ல முடியாத அளவுக்கு வார்த்தைகள் அவருக்கு கைகுடுத்துருக்குனு சொல்ல முடியும். எல்லாமே ஒரு பக்கக்கதை. ரசிக்கும் படி இருந்தது. ஒரே மூச்சில் வாசிக்க முடியும். சளிப்பே கொடுத்திராத எழுத்து நடை. முதல் புத்தகத்துல இவளோ எதிர்பாக்கல. எழுத்துக்கான அங்கீகாரத்தை எதிர்பாக்காம தொடர்ந்து எழுதுங்க. ஒரு படைப்புக்கும் அடுத்த படைப்புக்குமே உங்களுக்கு வித்யாசம் தெரியும். அதை யாருமே சொல்லித்தர வேண்டாம். அப்டி வருவது தான் பக்குவம். சொல்லித்தெரியாமல் இருப்பது மன்மத கலை மட்டும் இல்லை எழுத்துக்கலையும் தான். எல்லா பகுதியையும் தொட்டு எழுதணும்னு நினைச்சத