பிணந்தின்னிகள்

என் நிர்வாண உடலை ஊரே கூடி  வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது.
நான் எங்கே இருக்கிறேன்? எனக்கு என்ன நடந்தது? எதுவும் விளங்கவில்லை. எழுந்திருக்க முயற்சித்து கொண்டிருக்கின்றேன் ஆனால் முடியவில்லை. என் உடல் நிலத்தில் கிடையாக வானம் பார்த்தப்படி கிடக்கிறது. கைகளும் கால்களும் நான்கு திசையிலிருந்த  மரத்துடன் சேர்த்திழுத்து அசைக்க முடியதாப்படி இறுக்கமாக கட்டப்பட்டிருந்தது. 
அவர்கள் ஒரு பக்கம் கயிராக எனது மார்புக்கச்சையை பயன்படுத்தியிருக்கிறார்கள்.  யோனியிலிருந்து வடிந்த குருதி நிலத்தில் படிந்து சிகப்புத்திட்டுகளாக காய்ந்து போயிருந்தது. அதில் எறும்புகளும், ஈக்களும் தங்களுக்கான   
ஆகாரத்தை தேடிக்கொண்டிருந்தன, இத்தனை நடந்தும் நான் எவ்வித வலியையும் உணரவில்லை. 
ஒரு நாளுக்கு மேலாக இங்கே கிடக்கிறேன். உடல் உப்பி, அழுக தொடங்கிவிட்டது போல? கூடியிருந்த சனம் மூக்கை மூடிக்கொண்டதை கவனித்தேன். கடுமையான துர்நாற்றம் காற்றில் கலந்திருக்க கூடும். எனக்கு இப்பொழுது எழுந்திருக்க வேண்டும். ஆனால் என் கட்டுக்களை அவிழ்த்துவிடயாரும் முயற்சிக்ககூட இல்லை. வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தில் படர்ந்திருந்த சோகத்தை என்னால் உணரமுடிந்தது. காரணம் புரியவில்லை. சிலர் கண்ணீர் விட்டார்கள். சிலர் பரிதாபமாக பார்த்து கொண்டிருந்தார்கள். 
அக்கூட்டத்தில் நான் அம்மா, அப்பா அல்லது அண்ணா யாரேனும் தென்படுகிறார்களாகவென்று 
தேடிப்பார்த்தேன். கண்டுவிட்டேன்..., அதொ...  அம்மா ! அது அவளேதான் பக்கத்தில் அண்ணனும் கூடவே ஊளையிட்டு சினுங்கியபடி கருப்பியும் நின்று கொண்டிருக்கின்றாள். 
"அம்மா... முதலில் என்னை இங்கிருந்து வீட்டுக்கு கூட்டிட்டுப்போ... ஒரு இரவும் பகலும் கடந்து இந்த காட்டில் தனியே கிடக்கிறேன். எனக்கு பயமாயிருக்கு! என்னை கண்டுபிடிக்க ஏன் இவ்வளவு தாமதம் ? கிட்டவாம்மா ஏன் தூரத்திலேயே நிக்குற ? வா.... வந்து என்கட்டுகளை அவிழ்த்துவிடு, நான் வீட்டுக்கு வரணும். 
இங்கே பார்  உடுத்தியிருந்த ஆடைகள் எல்லாம் துண்டுகளாக கிழித்தெறிப்பட்டுவிட்டது.
அதை என்னால் திருப்பி உடுத்தி கொள்ளமுடியாது. அவைகள் இப்பொழுது எங்கேயேன்று கூடத்தெரியவில்லை. முதலில் ஏதாச்சும் துணியை என் மேல் இட்டு உடம்பை மறை. எவ்வளவு நேரமாகதான் இப்படி அம்மணமாக கிடப்பேன். நான் இங்கே கத்திக்கிட்டு இருக்கேன், இப்படி உணர்ச்சியே இல்லாத ஜடம்மாதிரி நின்னுகிட்டு இருக்க... உன் கண்ணுக்கு எதுவுமே  தெரியலயாடி!? " 
நான் பேசுவது ஒன்றுக்கும் அவள் செவிசாய்க்காமல்    
திக்பிரமையுடன் என்னையே உற்றுப்  பார்த்தப்படியிருந்தால். அவளின் விசித்திரமான நடவடிக்கைகள் என்னை மேலும் குழப்பத்திற்கு உள்ளாக்கின, ஒரு இழவும்  புரியவில்லை! 
நான் ஒரு முட்டாள் என் வாயில் நிறைந்திருந்த மண் தொண்டையைத்  தாண்டி மூச்சு குழல் வரை சென்றிருந்ததை 
மறந்தே போய்விட்டேன்.
 நான் பேசியது ஒன்றும் அவளுக்கு விளங்கியிருக்க வாய்ப்பில்லை. 
நான் பார்த்து கொண்டிருக்கும் போதே அம்மா மயங்கி சரிந்து விழுந்தாள். அண்ணன் அதைக்கூட கவனிக்காது என்னை பார்த்து கதறியழுபடியிருந்தான். இப்பொழுது அவர்களை என்னிடம் நெருங்கிவர போலீஸ் அனுமதிக்கவில்லை. 
இந்த பதினைத்து வருடங்களில் 
அவன் அழுது பார்த்த ஞாபகமேயில்லை. எப்பொழுதும் என்னை சீண்டிக்கொண்டே இருப்பான். ஆனால் என் மீது மிகுந்த  பாசமுடையவன். அவனை இப்படி பார்க்க என்னால் முடியவில்லை. ஆறுதல் படுத்தும் நிலையிலும் நானில்லை. நான் இறந்து விட்டதை இப்பொழுது உணரமுடிகிறது . 
என் உருக்குலைந்த தேகத்தை 
நானே பார்த்து கொண்டிருக்கிறேன். நான் இறந்து இன்றுடன் ஒரு நாள் முடிந்துவிட்டது. இப்பொழுது புரிகிறது. உடல் முழுவதும் கடுமையாக சிதைக்கபட்டிருந்தும் நான் ஏன் வேதனையை உணரவில்லையேன, நான் எப்படி இங்கு வந்து சேர்ந்தேன். எனக்கு என்ன நடந்தது. எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வருகிறது.

" திவ்யா... திவ்யா... எழும்புடீ! இன்னைக்கு ஸ்கூல் போற யோசனை இருக்கா? இல்லையா ?  மணி ஆறாக போகுது இன்னும் தூங்கிட்டுயிருக்க அலாரம் வேற அஞ்சு மணியிலயிருந்து அடிச்சிட்டிருக்கு, தூங்குனது 
போதும்  எழும்பு...! "

அம்மா கத்திக் கொண்டிருந்ததை கேட்டு தூக்கம் கலைந்து எழுந்தேன்.
" சரிம்மா... எழுப்பிட்டேன் கத்தாத "
படுக்கையில் இருந்து முனங்கியப்படி சோம்பல் முறித்த என்னை கண்ட உற்சாகத்தில் 'கருப்பி'
வாலைக்குழைத்து ஆட்டியப்படி  நெருங்கி அருகில் வந்து முகத்தை நாக்கால் ஸ்பரிக்க தொடங்கிட்டாள். 
பதிலுக்கு நானும் தலையை தடவிகொடுத்து கட்டிபிடித்து முத்தம் கொடுத்ததும் இன்னும் உற்சாகம்கூடி
அவள் பாஷையில் சினுங்கியப்படி விளையாட ஆரம்பிக்க  " போதும் 
கருப்பி போ... எனக்கு ஸ்கூல் போக சுணங்குதுனு " ஒருவாறு அவளை சமாளித்தவிட்டு படுக்கையை விட்டேழுந்தேன். இது தினமும் கருப்பிக்கும் எனக்குமிடையில் நடக்கும் வழமையான சம்பிரதாயம். 
தினம்தோறும் காலையில் எதோ என்னை அன்றுதான் பார்த்தது 
போல நடந்து கொள்வாள். ஒவ்வொருனாளும் புதிய நாள் 
தான் அவளுக்கு. 

தூங்கிய நேரத்தை சமன் செய்ய வேகவேகமாக தயாராகிவிட்டு கடிகாரத்தை பார்த்த பொழுது வெளிக்கிளம்பும் நேரம் சரியாகதான் இருந்தது. அம்மா சமயலறையில் பரபரப்பின்றி மெதுவாக வேலைகளை செய்து கொண்டிருந்ததை பார்க்கும் பொழுது அப்பாவும், அண்ணனும் இன்று வழமையை விட நேரத்துக்கே வேலைக்கு கிளப்பிவிட்டார்கள் என புரிந்துகொண்டேன். 

நான் சைக்கிளில் ஏறி மிதித்தபடி  "அம்மா நான் போய்ட்டுவாரேன்னு " பயணத்தை சொல்லிட்டு மெதுவாக செலுத்த ஆரம்பித்தேன். " கவனமா போய்ட்டு வா... " வென்ற அம்மாவின் குரல் வீட்டின் உள்ளேயிருந்து மெதுவாக என் காதில் விழுந்த போது நான் வீட்டுவேளியை தாண்டி போய்க்கொண்டிருந்தேன்.    

ஊரிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில்தான் பள்ளிக்கூடம் இருந்தது. காட்டுப் பாதையெல்லாம் தாண்டித்தான் போகவேண்டும். வழமையாக பாதிவழியில் என் தோழிகள் இருவரும் சேர்ந்து கொள்வார்கள். அன்று சொல்லிவைத்தால் போல அவர்களும் வரவில்லை. 
'ரெண்டு பேரும் ஒன்னா லீவு போட்டுட்டாளுங்க. நாளைக்கு வரட்டும் பார்த்துகிறேன்' என்று எனக்குள்ளேயே  பேசிக்கொண்டேன். பல வருடமாக போய்வரும் பாதைதான் சில நாட்கள் இப்படி தனியாக போகவேண்டியும் வரும். எனக்கு அது புதிதும் அல்ல, பழகிவிட்டது.

அன்றையதினம் காட்டுப் பாதையை கடக்கும் போது எதிரில் அந்த சிகப்பு நிறக் காரை பார்த்தேன். பாதையோரத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்தது. 
அதைக்கடந்து போகும் போது காருக்குள்ளிருந்து "திவ்யா " 
வென்று யாரோ கூப்பிடும் குரல் கேட்டது. மிக பழக்கமான குரல்தான் சைக்கிளின் வேகத்தை குறைத்தபடி  திருப்பி பார்த்தேன். அண்ணாவின் நண்பர் ஒருவர்தான் கூப்பிட்டது. கூடவே மேலும் மூன்று பேர் காரினுள் இருந்தார்கள். எல்லோரும் ஊரினுள் பார்த்துப்பழகிய  முகங்கள். ஒரு தாடி வைத்த நடுத்தர வயது மதிக்கதக்க வழுக்கை தலையணை தவிர, அவன் பார்வையே விஷமம்மாக இருந்தது. "என்னமா தனியாப்போற, உன் ப்ரண்ட்ஸ் யாரும் இன்னைக்குகூட வரலையானு " கேட்டப்படி அண்ணாவின் நண்பர் நெருங்கி வந்தார். நான் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் 
போது அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் ஒரு தினுசாக சுற்றும் முற்றும் அவர் பார்த்தது 
அங்கு வேறு யாரும்மில்லை என்பதை உறுதிப்படுத்துவது போலிருந்தது.
மற்றைய இருவரும் காரிலிருந்து இறங்கி என்னை நோக்கி வருவதை கவனித்தேன். அடுத்து எதோ மோசமாக நிகழப்போகிறது என்பது மட்டும் உறுதியாகிற்று. சைக்கிளை வேகமாக மிதித்து அவ்விடத்தை 
விட்டு கூடிய விரைவில் நகர்ந்தேன். முன்னால் வந்தவன் வேகமாக விலகி எட்டிப்பாய்ந்து என் தலைமுடியை பற்றிப் பிடித்திழுத்தான். 
சைக்கிளிலிருந்து சில அடித்தூரம் தூக்கியேறியப்பட்டேன். நல்ல அடி! என்னால் நகரமுடியவில்லை. 
எல்லாம் ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்தது. என்னை நெருங்கி வந்த மூவரும் அப்பிடியே இழுத்து காரினுள் போட்டுக்கொண்டு காட்டுப்பாதையினுள் நுழைந்தார்கள்.
காட்டினுள் யுத்தகாலத்தில் புதைக்கபட்ட மிதிவெடிகள் இன்னும் முற்றுமுழுதாக அகற்றபட்டிருக்கவில்லை. 
அதனால் மனிதநடமாட்டம் இருக்காது. இது தான் கடைசி வாய்ப்பு காட்டினுள் நுழைத்துவிட்டால் தப்பிக்கும் வாய்ப்பேயில்லாமல் போய்விடுமென்று தெரியும் அதனால் முடிந்த மட்டும் சத்தம் போட்டு கத்தியப்படி, திமிறி போராட ஆரம்பித்தேன். " டேய்... அவளை கத்தவிடாத வாய கட்டு " வென்று  யாரோ சொல்வது கேட்டது. 
முரட்டு கைகலிரண்டு என் வாயையும் மூக்கையும் சேர்த்து ஒன்றா அழுத்தியது. சுவாசிக்க முடியவில்லை. மூச்சு திணறியது. அவர்கள் என்னை போட்டு இறுக்கியத்தில் என்னால் ஒரு அங்குலம் கூட நகர முடியவில்லை. 
அந்த கணம் என் சக்தியை முழுதாக இழந்து விட்டிருந்தேன். நிலைமை கைமீறி போய்விட்டது. எல்லாக்கைகளும் என் மேல் எலி போன்று ஊரத்தொடங்கியது, 
நான் மெது மெதுவாக பிரக்ஞையை இழந்து மூர்ச்சையாகி    கொண்டிருந்தேன். 
கண்முழித்து பார்த்தப்பொழுது  நிலத்தில் கிடந்தேன். உடைகள் முழுமையா கலையபட்டிருந்தது. உடலும் அசைக்க முடியாதப்படி எதிலோ பிணைக்கப்பட்டிருந்தது. உடம்பெல்லாம் நகக்கீறலும், வெறிநாய் கடித்த மாதிரியான 
பற் தடங்கலும். கை மூட்டு வேறு கோணலாக திருப்பியிருந்தது அநேகமாக உடைக்கப்பட்டிருக்க வேண்டும். உடல் பூராகவும் பரவிய  மரணவலியில் துடித்து கொண்டிருந்தேன். அக்கணம் என்னிடம் உயிரைத் தவிர வேறொன்றும் மிச்சமிருக்கவில்லை. 
இருந்தும் சக்தியெல்லாம் திரட்டி துவண்ட குரலில்  "என்னை... விட்ருங்கனு..." மன்றாடிக்கேட்டேன். 
யாரும் என் கதறலை  கண்டுகொள்ளவில்லை. ஒருத்தன் மாற்றி ஒருத்தனாக என்னை 
சிதைத்து கொண்டிருந்தார்கள். 
" வேச...! இத்தனை பேர் காலையிலயிருந்து ஏறியும் அடங்குறளானு பாருவேன்னு "
யாரோ ஒருத்தன் திட்டியப்படி 
வெறிபிடித்தவன் போல என் கன்னத்தில் பளார், பளார் என சரமாரியாக அறைந்தான்.
பிறகு என் மார்பை பலம் கொண்ட மட்டும் முறுக்கி அழுத்தினான் காம்பின் வழியே ரத்தம்பீறிட்டது.
நான் வலியில் துடித்து வீறிட்டு  அழுவதைக்கண்டு ஆர்கஸம் அடைந்தான். இன்னொருவன் கைப்பிடி மண்ணை அள்ளி என் வாயில் போட்டான். அதற்கு 
பிறகு வலியை நான் உணரவில்லை. பிணந்தின்னிகள் என் உயிர் பிரிந்தது கூடத்தெரியமால் பிணத்தை புணர்ந்து கொண்டிருந்தார்கள். 
இவர்களும் பெண்ணின் யோனி வழியே வெளிவந்து, முலையில் பாலுண்டவர்கள் தான். இன்று  
நெக்ரோபிலியாவாக மாறிப்போயிருந்தார்கள்.
***
நரேஷ் 

Comments

  1. அருமை சகோ.வலியை உணர்த்தியது

    ReplyDelete
  2. Replies
    1. கதையை உணர்ந்து வாசித்தமைக்கு நன்றி !

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றி சகோ !

      Delete
    2. மிக்க நன்றி சகோ !

      Delete
  4. அருமை. நிஜமாக இருக்கக்கூடாதென மனம் விருப்புகிறது.

    ReplyDelete
    Replies
    1. இது நிஜமான சம்பவம் தான். புனைந்து கதையாக எழுதினேன்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I