'சிங்க' பெண்கள்
மகளிர் தினத்திற்கு ஒருவாரம் முன்பும், பிறகு முடிந்து சிலநாட்கள் கழித்தும்
'சிங்க' பெண்கள் பேரும் வெறியுடன் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
வழியில் சிக்குபவர்களுக்கு எல்லாம் செமத்தியான அடி, புரட்டி எடுத்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பதிவுகளில் பொத்தம்பொதுவாக எல்லா ஆண்களையும் வில்லன்களாக்கி போட்டுத் தாக்கி கொண்டிருக்கிறார்கள்.
அநேகமாக அவர்கள் படித்த சமீபத்திய அதிதீவிர பெண்ணியவாதிகளின் நூல்களும், சிந்தனைகளும் தான் இதற்கு காரணம். கற்றறிதல் நல்ல விஷயம்தான். ஆனால் அதை அப்படியே தங்களை சுற்றியுள்ள உண்மையாகவே பெண்களின் மீது அன்பும், அக்கறையும், நம்பிக்கையும், கொண்ட உறவுகளான அப்பா, அண்ணா, நண்பன், காதலன் மீது திடீர் என்று பிரயோகிக்கும் போது
" இந்த புள்ளைக்கு என்னாச்சு!, எதுக்கு எரிச்சு விழுறா!? " வென்று, ஒரு மண்ணும் புரியாது தடுமாறி போகிறார்கள்.
இதில் மோசமாக தாக்கபடுவது நிஜமாகவே பெண்களை மதித்து அன்பு செய்யும் ஆண்கள்தான். பாவம் வெறித்தனமான தாக்குதல்!.
இப்பொழுதுதெல்லாம் பெண்கள் தினவாழ்த்து சொல்லவே பயமாக உள்ளது.
Comments
Post a Comment