ஊரிலே மிக அழகான பெண்!

ஊரிலே மிக அழகான பெண்ணொருத்தி தனக்கு ஆண் துணை தேவையில்லை என்றும். தனிமையை நேசிப்பதாகவும் இப்படியே மிகுதிநாட்களையும் வாழ்ந்து விடபோகவதாகும் புலம்பிகொண்டு இருந்தால். ஒருவேளை அவள் சொல்லுவது நிஜமாகயிருக்கும் பட்சத்தில் அதை விட ஓரு கொடும் செயல் இந்த உலகத்தில் எதுவும் கிடையாது! கைதேர்ந்த சமையல் வல்லுனரினால் தயாரிக்கபட்ட ஓரு அரும்சுவை உணவு பண்டம் ருசிபார்க்கப்படாமலே வீணடிக்கப்படுவது மகாபாவம்! எனக்கு தெரிந்து அவள் உரைப்பது பொய். தனிமை தந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான் அந்த உளறல்கள். அவளின் தேகம் பசலை கொள்ள ஆரம்பித்துவிட்டது. இப்பொழுது தேவையேல்லாம் இறுக்கி பற்றி கொள்ள அவனின் கைகளும், முகம் சாய்த்து புதைந்து தொலைய அவன்  நெஞ்சும் மட்டுமே! இதில் முரண்நகை என்னவென்றால் பெரும்பாலான நேரங்களில் அந்த உணவு ருசிக்க தெரியாதவனின் தட்டிலேயே பரிமாறபடுகின்றது.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

அங்கு யாரும் புலப்படவில்லை

நரகம்

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I