கார்த்தி டயல் செய்த எண்
கார்த்தி டயல் செய்த எண்
குறும்படத்தில் கார்த்தி ஜெஸியிடம்
"ஒரு ஆணா கேட்குறேன்
நீ எனக்கு வேணும் " என்ற வசனம் இங்கு பல கோவலன்களிடம் பெரும் எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. உங்களிடம் ஒன்று கூறவேண்டும். இந்த உலகம் கார்த்தி மற்றும் ஜெஸிகளால் நிரம்பியது.
நம் தாத்தா, பாட்டி கூட இதில் அடக்கம். உங்கள் ஜெஸி அவள் கார்த்தியுடன் புணராமல் இருக்க வேண்டும் என்று நினைப்பதில் ஒன்றும் தவறு கிடையாது.
அதற்கு நீங்கள் கற்பு / பருப்பு
என்று வியாக்கினம் பேசி வேலைக்கு ஆகாது. உங்களிடமிருந்து கிடைக்க வேண்டியது சரியாக கிடைத்துவிட்டால் இந்த படத்தில் வருவது போல கார்த்தியிடம்
எப்படி நைஸாக பேசி அந்த நிலைமை சாதுரியமாக கையாண்டலோ, அதை நிஜ ஜெஸிகள் இன்னும் சிறப்பாக செய்து விடுவார்கள். மேல உங்களிடம் அவளுக்கு வேண்டியதென்று நான்
குறிப்பிட்டது உங்கள் நீண்ட ஆண்குறியை அல்ல!
அன்பும், அரவணைப்பும்.
பிறகு தான் படுக்கை.
இல்லை. நான் எப்படி இருந்தாலும்
நீ கண்ணகியாக தான் வாழவேண்டும் என்று நினைத்தால். புணருதலையே பிறவி நோக்கமாக வைத்து வெறியுடன் அலைந்து கொண்டிருக்கும் மங்கோலிய ஓநாய்களுக்கு ஒப்பான சில கார்த்திகளிடம் இருந்து உங்கள் ஜெஸியை காப்பாற்றுவது கடினம்!
https://m.youtube.com/watch?v=sO5a-_K-bFU&feature=share
🤝
ReplyDeleteThanks
Delete