ஓருடல்
நேற்று இருவரும் வார்த்தைகளால்
ஒருவரை ஒருவர் கடுமையாகத்
தாக்கிக்கொண்டோம்.
சோர்ந்து, காயத்துடன் வெறுத்து
ஒதுங்கிச் சென்றோம்.
அவ்வளவு தான், முடித்துக்கொள்ளலாம்
என்று தீர்மானித்துக் கொண்டேன்.
பிறகு மறந்து விட்டோம்.
நான் உன்னை இப்பொழுது
முத்தமிட்டுக் கொண்டிருக்கிறேன்.
07-24-2021
Comments
Post a Comment