பசி
அன்று முழு நாள் பட்டினி
நீரை மண்டி விட்டு படுத்திருந்தோம்.
சாமத்தில் அப்பா வந்தார்,
கையிலிருந்த கால் கிலோ
மாவை அம்மாவிடம் நீட்டினார்.
அவள் விறகடுப்பில் புகைந்து
கொண்டே ரொட்டிச் சுட்டாள்.
சம்பல் செய்யத் தேங்காயில்லை. வெங்காயம், புளி, மீந்து போயிருந்த இரண்டு காய்ந்த மிளகாய் வைத்து ஏதோ அம்மியில் மாயம் செய்தாள்.
அதற்கு பிறகு, நான் அது போன்ற
ஒரு சுவையான உணவை
எங்குமே சாப்பிட்டதில்லை.
23-07-2021
Comments
Post a Comment