ஆதிமனிதனின் புணர்ச்சி
ஆதியில் கற்கால மனிதர்கள் சிறு சிறு கூட்டமாக சேர்ந்து வாழ்ந்தார்கள்.
அக்கூட்டத்திலுள்ள ஒரு ஆண் விரும்பிய எந்த பெண்ணுடன் வேண்டுமென்றாலும் உறவுக் கொள்ளலாம். அதே போல
பெண்ணும் அக்கூட்டத்திலுள்ள எந்த ஆணுடனும் உறவுக் கொள்ளமுடியும். அதனால் எது தனக்கு பிறந்த பிள்ளையென்று ஒரு ஆணுக்கு சரியாக தெரியாது. அவன் எல்லா பிள்ளைகளையும் சமமாக பாவித்து உணவு, பாதுகாப்பு அளித்து பார்த்துக் கொண்டான்.
அச்சமூகத்தில் ஓர் ஆதிவாசி பெண் கருவுற்றிருக்கும் தருணத்தில் தான் தீவிரமாக, ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடனும் புணர்ச்சியில்
ஈடுபடுவாள். அதற்கு காரணம் காமவேட்கையல்ல, பல ஆண்களின் கவனிப்பும் பாதுகாப்பும் தன் பிள்ளைக்கு கிடைக்கும் என்பதே. அக்காலத்தில்
பல ஆண்களின் விந்துக்கள் பெண்ணின் கருவறையில் உள்ள முட்டையுடன் சேரும் பொழுதுதான் குழந்தை உருவாகுவதாக நம்பினார்கள். அதனால் ஒரு சிறந்த வேட்டைக்காரன், புல்லாங்குழல் வாசிப்பவன், அறிவாளி, நற்குணங்களை உடையவன், பலசாலியேன தேர்ந்தெடுத்து உறவுக் கொள்வாள். தனக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு இந்த திறன்கள் எல்லாம் வந்துவிடும் என்று உறுதியாக நம்பினாள்.
நவீன காலத்தில் பிறப்பை உறுதிப்படுத்தும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் வரை நாம் இதைதான் நம்பிக்கொண்டிருந்தோம்.
***
சேப்பியன்ஸ் பதிவு - 2
நரேஷ் 03-23-2020
தங்கள் அருமையான பதிவுகளை TamilBM(https://bookmarking.tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.
ReplyDelete