சொத்தும் கடனும்
பணக்காரர்கள் மேலும் செல்வந்தர்களாக ஆவதற்கும். மத்திய வர்க்கமும்,
ஏழைகளும் அதேநிலையில்
இருப்பதற்கும் மிகமுக்கிய
காரணங்களில் ஒன்று பணத்தின்
இயல்பை புரிந்துகொள்ளாமையே.
பணக்காரர்கள் பணத்தை தங்களுக்கு வேலைசெய்ய வைக்கிறார்கள். மத்திய வர்க்கமும், ஏழைகளும் பணத்திற்காக வேலை செய்கிறார்கள்.
பணத்தை நமக்காக வேலை செய்யவைப்பதற்கு நாம் சரியான
விதத்தில் முதலீடு செய்யவேண்டும்.
அதற்கு பிறகு அந்த பணம் நமக்காக
வேலை செய்யும். உங்கள் சொத்துக்களின் பெறுமதியை அதிகரிக்கும். இப்பொழுது உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம்.
வரவும் சிலவும் சரியாக இருக்கு
போது எப்படி முதலீடு செய்வதென்று? சவாலான விஷயம்தான்.
இங்கு தான் தேங்கி நின்று விடுகிறோம். இதை வெற்றிகரமாக தாண்டிவர நம் சுயதிறனை வளர்த்து கொள்ளவேண்டும்.
எப்படி வருமானத்தை அதிகரிப்பது?
*நீங்கள் இப்பொழுது செய்யும்
வேலையுடன் பகுதி நேரமாக இன்னொரு வேலையை சேர்த்து செய்யலாம்.
*உங்களிடம் விசேட திறமைகள் எதும் இருப்பின். அதன் மூலம் பகுதிநேர வருவாயை அதிகரித்து கொள்ளலாம்.
உதாரணமாக; உங்களுக்கு கம்ப்யூட்டரை பழுதுபார்க்க முடியும் என்று வைத்துகொள்வோம். அதனை பகுதி நேரமாக செய்யலாம்.
*கிராமம் அல்லது நெரிசல் அற்ற இடவசதி உள்ள இடமாக இருந்தால். சிறிய/பெரிய அளவில் பண்ணை விலங்குகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தலாம்.
*வெளிநாட்டுவேலை வாய்ப்புகளில்
கவனம் செலுத்தலாம்.
மேற்குறிப்பிட்ட எதோ ஒன்றில் நீங்கள் பணத்தை சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு அதை கொண்டு சொத்துக்களை வாங்க வேண்டும். கடனை அல்ல, கவனிக்க;
இங்கு தான் நாம் அடிவாங்குகிறோம். சொத்துக்கும் கடனுக்கும் வித்தியாசம் தெரியாது அதனை குழப்பி கொள்கின்றோம்.
நீங்கள் ஐந்து வருடம் உழைத்து
சம்பாதித்த பணத்தை கொண்டு
ஒரு ஆட்டோவை வீட்டு தேவைக்காக வாங்குகிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள். அதனை பராமரிக்கும்
சிலவு வருடத்திற்கு கணிசமான தொகைவரும். இதன் மூலம் நீங்கள் பயணங்களுக்கு மிச்சப்படுத்தம் தொகையை விட அதிகமாக சிலவு செய்ய வேண்டிவரும். அத்துடன் நீங்கள் இந்த வண்டியை வாங்க சிலவு செய்த மூலதொகையும் முடங்கி போய்விடும். யோசித்து பாருங்கள் அந்த பணத்தை எத்தனை வருட கடின உழைப்பில்
சிறுக சிறுக சேமித்தீர்களென்று.
இப்பொழுது நீங்கள் சொத்தாக
நினைக்கும் வண்டி எவ்வித வருமானத்தையும் உருவாக்கவில்லை. மாறக உங்களுக்கு மேலதிக சிலவை மட்டும்தான் தந்துள்ளது. ஒரு வேளை
அதே பணத்தை சரியான விதத்தில்
முதலீடு செய்திருந்தால், பணம் பணத்தை சம்பாதிக்க ஆரம்பித்திருக்கும். உடனே அப்படிபட்ட சிறந்த முதலீடு எதுவென்று என்னை கேட்கவேண்டாம். இதற்கு
உங்கள் மூளையை பயன்படுத்த
வேண்டும். ஓர் உதாரணத்திற்கு சொல்கிறேன். நீங்கள் வண்டி வாங்கிய பணத்தை நிலம் வாங்குவதற்கு முதலீடு செய்திருந்தால் காலப்போக்கில்
அதன் பெறுமதி அதிகரிக்கும்.
ஓர் தருணத்தில் விற்றுவிட்டு
அந்த பணத்திற்கு இதை விடபெறுமதி கூடிய இன்னொரு நிலத்தில் முதலீடு செய்யலாம். அடுத்து முறை அதை
விற்பனை செய்யும் போது அந்த
லாபத்தில் நீங்கள் வண்டியை வாங்கலாம். கவனித்து பாருங்கள் இப்பொழுது உங்கள் சொத்து உருவாக்கி தந்த வருமானத்தில் வண்டியை வாங்கி உள்ளீர்கள்.
இதை தான் பணக்காரர்கள்
செய்கிறார்கள். அவர் சொத்துக்களை கைவசப்படுத்துகிறார்கள்.
மத்திய வர்க்கம் சொத்து என்று நினைத்து கடனை கைவசப்படுத்துகிறது.
பாவம் ஏழைகளுக்கு இரண்டும் இல்லை சிலவு மட்டுமே.
என்னை பொறுத்தவரைக்கும்
நாம் சொத்து என்று நம்பி தகுதிக்கு மீறிகட்டப்படும் பெரிய வீடுகூட கடன்தான். நாம் ஆயுள் முழுவது சம்பாதித்த பணத்தை அல்லது கடன் வாங்கிய பணத்தையும்
அதில் முடக்கிவிட்டு பிறகு அந்த கடனை பற்றிய மனஉளைச்சலில் ஹார்ட் அட்டாக் வந்து சாகவேண்டியதுதான்.
Comments
Post a Comment