கடிகாரத்தை பார்க்கப்
பிடிக்கவில்லை
நாட்காட்டியை வெறுக்க
ஆரம்பித்துவிட்டேன்.
வருடங்கள் சலிப்பை
ஏற்படுத்துகின்றன.
காலம் சுழியமாக உறைந்திருக்கும்
இடத்தில் வாழப்பிடிக்கிறது.
நான் ஒரு முட்டாள், அங்கு தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
மனிதர்கள் தான் உலகத்தின்
இயல்பை மாற்றிவிட்டார்கள்.
10-05-2020
நரேஷ்
Comments
Post a Comment