அரை பிச்சைக்காரன்

ஊருக்கு சென்று வேலையில்லாமல் தெருத்தெருவாக சுற்றி அலைவது போல ஒரு கனவுக் கண்டேன். இதை எல்லாம் நினைத்து பார்க்கும் போதே பயமாக இருக்கிறது. ஊருக்கு சென்றால் நண்பர்களுடன் சேர்ந்து சோமபானம் அருந்தலாம். முகத்தை மறைக்காத  தேவதைகளை பார்க்கலாம். பிறகு கிரகஸ்தனாக மாறி லெளகிக வாழ்க்கையில் உழலலாம். இப்படி சில சந்தோசங்கள் இருந்தாலும் வெளிநாட்டில் இருக்கும் போதே அரை பிச்சைக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கும் நான் ஊருக்கு சென்றதும் முழு பிச்சைக்காரனாக மாற வேண்டியிருப்பதை நினைத்து பார்த்தால் தான் கொஞ்சம் கலக்கமாக இருக்கிறது. நண்பன் வேறு "மச்சா புத்தகம் எதும் எழுதும் ஆசை இருந்தா, அங்க இருக்கும் போதே எழுதி விடு. இங்கு வந்த பிறகு லோல் படுவதற்கே நேரம் சரியாக இருக்கும்" என்று பயமுறுத்துகிறான். உண்மை தான்  எந்நேரமும் அரிசி வாங்குவதை பற்றிய யோசனை மண்டையில் இருக்கும் போது இலக்கியம் எப்படி வரும். எழுத்தாளனாக வாழ்வது கூட ஆடம்பரம் தான்.

Comments

Popular posts from this blog

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் ( The Richest Man in Babylon)

பிணந்தின்னிகள்

நரகம்

அங்கு யாரும் புலப்படவில்லை

வாட்ஸ்அப்

அன்புள்ள கண்ணம்மாவிற்கு

கடந்து வந்த பாதை

நறுமுகை

எனக்கென ஒரு கனவிருந்தது...

மிகைல் A . I